இல்லதரசிகளுக்கு அடுத்த பெரிய ட்விஸ்ட்... சமையல் எண்ணெய் விலை கடுமையான உயர்வு
சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சமையல் சிலிண்டரை தொடர்ந்து சமையல் எண்ணெய் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இது சாமானிய மக்களைப் பெரிதும் பாதித்திருக்கிறது . சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. மறுபக்கம் இருக்கும் ஓட்டல்களில் விலை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் சமையல் எண்ணெய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்திருப்பதாக மொத்த வியாபாரி கொளத்தூர் சாலை வியாபாரி முன்னேற்ற சங்க பொருளாளர் அமிர்தராஜ் கூறினார். மக்கள் பலர் பயன்படுத்தக் கூடிய சூரிய காந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) முன்பு ஒரு லிட்டர் ரூ.155-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.170-க்கு விற்பனையாகிறது.

விலை எவ்வளவு உயர்வு
சில்லரை கடைகளில் இதன் விலை ரூ.175 ஆக விற்கப்படுகிறது. இதேபோல், பாமாயில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு லிட்டர் மொத்த விலையில் ரூ.110-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.122 வரை மொத்த விற்பனை கடைகளில் விற்பனையாகிறது. சில்லரை கடைகளில் இ 130 ஆக விற்பனையாகிறது. அந்தவகையில் சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த 2 வாரத்தில் மட்டும் உயர்ந்திருக்கிறது. இதுதவிர, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தப்பட்டு விற்பனையாகிறது.
இறக்குமதி அதிகம்
இந்தியா சமையல் எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை கடல் வழியாகவே இறக்குமதி செய்கிறது. கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும்போது காப்பீட்டுச் செலவு மற்றும் எரிபொருள் செலவு அதிகரிப்பதாலும் விலை உயரும். அந்த வகையில் தற்போது ஈரான் போரால் கடல்வழி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பிலேயே வாங்கப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்போது, இறக்குமதிச் செலவு அதிகரித்து சில்லரை விலையில் எதிரொலிக்கும். இப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் விலை உயர காரணமாகி உள்ளது.
இறக்குமதி அதிகம்
இந்தியா சமையல் எண்ணெய் தேவையில் இறக்குமதியைத்தான் அதிகம் நம்பி இருக்கிறது. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 55% முதல் 60% வரை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய்களில் சுமார் 60% பாமாயில் ஆகும். இது முக்கியமாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக
சூரியகாந்தி எண்ணெய் . இது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதியாகிறது. அதேபோல் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியாகிறது. இது பெரும்பாலும் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து வருகிறது. இந்திய மக்கள் தொகை அதிகம் என்பதுடன் உணவுப் பழக்கவழக்கங்களால் சமையல் எண்ணெய்க்கான தேவை மிக அதிகம்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications