புரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி!
சென்னை: புரேவி புயலுக்கு பிறகு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் டிசம்பர் 7-ஆம் தேதி நிலவரப்படி புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே செல்வது போல் சாட்டிலைட் லைவ் வீடியோ காண்பிக்கிறது. எனினும் அந்த காற்றழுத்தம் எங்கே செல்கிறது என அறிய இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்றே தெரிகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த பருவமழையில் முதல் முறையாக வங்கக் கடலில் ஒரு புயல் உருவானது அதற்கு நிவர் என பெயரிடப்பட்டது.
இந்த புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னைக்கு போதுமான மழையை கொடுத்துவிட்டு சென்றது.

24 மணி நேரம்
இந்த மழையால் சென்னையில் உள்ள நீராதார ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தோடுகின்றன. சராசரிக்கு அதிகமாகவே சென்னைக்கு நிவர் மழையை கொடுத்துவிட்டது. இந்த புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கரையை கடந்த நிலையில் தற்போது இன்னும் 24 மணி நேரத்தில் மற்றொரு புயல் உருவாகவுள்ளது.

புயல்
இதற்கு புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் எங்கு கரையை கடக்கும் என்பது தெரியவில்லை. நாகை அருகே கரையை கடப்பது போன்று இருந்தது. எனவே மழையே இல்லாத டெல்டா மாவட்ட மக்களுக்கு இதன் மூலம் மழை வரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிவரை போல புரேவியும் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என வானிலை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சென்னை- புதுவை
இந்த நிலையில் புரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம் அந்தமான் அருகே உருவாகிறது. இந்த காற்றழுத்தம் புயலாக மாறுமா என தெரியவில்லை. எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்றும் உறுதிப்பட தெரியவில்லை. ஆனால் தனியார் செயலியை பார்க்கும் போது டிசம்பர் 7-ஆம் தேதி வாக்கில் சென்னை- புதுவை இடையே சுழன்றடித்துக் கொண்டு வருகிறது.

காற்றழுத்தம்
இதனால் மீண்டும் சென்னைக்கு இந்த காற்றழுத்தம் வருகிறதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்தமாக இருந்தால் மழையை கொடுக்கும். ஏற்கெனவே நிவரால் பெய்த மழையால் சென்னையில் முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவே இல்லை. இந்த நிலையில் மேலும் மழை பெய்தால் என்னவாவது? ஒருவேளை புயலாக மாறினால் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டால் என்ன செய்வது? எனவே எங்கு மழை இல்லையோ அந்த இடத்திற்கு இந்த காற்றழுத்தம் சென்று மக்களுக்கு மழையை வாரி கொடுக்க வேண்டும்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications