12.12 மணிக்குத்தான் தமாகா வேட்பாளர்களை அறிவிப்பேன்! ஜி.கே.வாசன் சொன்னதற்கான காரணம் என்ன?
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் பட்டியலை சரியாக 12.12. மணிக்கு வெளியிட்டது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கான காரணத்தையும் வாசனே தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

இந்த கூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் 5 பேரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக தமாகா தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் இன்றைய தினம் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
இன்று காலை 11.57 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த போது ஜி.கே. வாசன் கூறுகையில், "நான் 12.12 மணிக்குத்தான் வேட்பாளர்களை அறிவிப்பேன். அது வரை கேள்விகள் ஏதாவது இருந்தால் கேளுங்கள்" என்றார்.
அதற்கு செய்தியாளர்கள் "ஏன் சார், நல்ல நேரமா" என கேட்டதற்கு வாசன், "உங்களுக்கு ஒரு சென்டிமென்ட் இருக்கிறது போல் எனக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. 100 சதவீதம் நல்ல நேரம்தான்" என்றார்.
அப்போது ஜி.கே.வாசன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டதால் தாமரை சின்னத்தில் நிற்கிறோம். அதிமுக கூட்டணி என்றாலும் நாங்கள் நீண்டகாலமாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றார்.
பின்னர் அண்ணாமலை குறித்து கேட்ட கேள்விக்கு தமாகாவை பற்றி என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள், அதற்கு நான் பதிலளிக்கிறேன். பிற கட்சிகள் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க முடியாது என்றார்.
அது போல் சென்னையில் ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்விக்கு வாசன், "சென்னையை எங்களுக்கு அதிமுக தரவில்லை. சென்னை என்றில்லை, தமிழகத்தில் பல தொகுதிகளை கேட்டும் தரவில்லை. உண்மையை சொல்வதில் தவறில்லை" என்றார்.
இந்த நிலையில் 12.12 மணி ஆனதும் அவர் வேட்பாளர்களை அறிவித்தார். அந்த வகையில் ஒட்டன்சத்திரம்-விடியல் சேகர், ஈரோடு மேற்கு -யுவராஜ், ராணிப்பேட்டை-வி.எம் கார்த்திகேயன், கிள்ளியூர் -நிவின் சைமன், கும்பகோணம் - அசோக் குமார் ஆகிய 5 வேட்பாளர்களை அறிவித்தார்.
12.12 மணிக்கு ஏன் அறிவிப்பு
பொதுவாக தமிழ்நாட்டு அரசியலில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, வேட்புமனுத் தாக்கல் போன்ற முக்கிய நிகழ்வுகளை "நல்ல நேரம்" பார்த்துச் செய்வது வழக்கம். இன்றைய தினம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் இருக்கிறது.
பிறகு மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை சுப ஓரை அல்லது கட்சிக்கு உகந்த லக்ன நேரம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 12.12 என்பது இரட்டை எண்களின் வரிசையில் அமைவதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஜி.கே. வாசன் எந்த ஒரு முக்கிய அறிவிப்பையும் தனது தந்தையார் ஜி.கே. மூப்பனார் வழியில் ஆன்மீக மற்றும் சாஸ்திர நம்பிக்கையுடன் செய்வது வழக்கம். 12.12 என்ற நேரம் "வெற்றியைக் குறிக்கும்" நேரமாக அவரது ஆஸ்தான ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications