கருணாநிதியின் கம்பீர சிலை - எவ்வளவு செலவு? தயாரித்தது யார்? எப்படி? நீங்கள் அறியாத டாப் 10 தகவல்
சென்னை: அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கம்பீர சிலை எப்படி தயாரிக்கப்பட்டது என்பது குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Recommended Video
1. இன்று திறக்கப்பட இருக்கும் கருணாநிதியின் முழு உருவ சிலையை வடிவமைத்த சிற்பியின் பெயர் தீனதயாளன். தமிழ்நாட்டில் மட்டுமே 20 க்கும் அதிகமான கருணாநிதியின் சிலைகளை தீனதயாளன் வடிவமைத்து இருக்கிறாராம்.
2. கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட அவரது முழு உருவ சிலையை வடிவமைத்துக் கொடுத்தவர் சிற்பி தீனதயாளன் தானாம்.

3. ஓமந்தூரார் தோட்டத்தில் திறக்கப்படும் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் சிலை வடிவிலேயே வடிவமைத்து இருக்கிறார்கள்.
4. 16 அடியில் அமைக்கப்படும் இந்த கருணாநிதி சிலை 3 டன் களிமண் மற்றும் மற்றும் 2 டன் வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டு உள்ளதாம்.
5. இந்த சிலை போல் ஏற்கனவே 3 டன் களிமண்ணை கொண்ட 16 அடி உயர மாதிரி சிலை வடிவமைக்கப்பட்டு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
6. முதலமைச்சரின் ஒப்புதலை பெற்ற பிறகு அந்த சிலையை மெழுகில் அச்சிட்டு உண்மையான கருணாநிதி சிலையை வடிவமைத்து இருக்கிறார் சிற்பி தீனதயாளன்.
7. கருணாநிதியின் இந்த புதிய சிலையே தமிழ்நாட்டில் உலோகத்தினால் அமைக்கப்படும் மிக உயரமான சிலை என கூறப்படுகிறது.
8. தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையின் செலவில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த கருணாநிதியின் சிலைக்கு ரூ.1.56 கோடி செலவிடப்பட்டு உள்ளார்களாம்.
9. சென்னை ஓமந்தூரார் தோட்டம் அருகே அண்ணா சாலை சிம்சன் அருகே தந்தை பெரியார் சிலையும், அதற்கு அருகே அண்ணா சாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலையும் உள்ள நிலையில் இரண்டு திராவிட இயக்க தலைவர்கள் சிலைக்கு மத்தியில் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.
10. இந்த சிலையை சாலைக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பமாக இருந்ததாம். ஆனால், அதிக உயரம் கொண்ட இந்த சிலையால் போக்குவரத்துக்கு பாதிப்பு வரலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதால் ஓமந்தூரார் வளாகத்தில் வைக்க முடிவு செய்தார்களாம்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications