புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க
சென்னை: இந்தியாவில் கடந்த 2024-2025ம் ஆண்டில் மட்டும் சுமார் 15.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சராசரி உயிரிழப்பு ஆண்டுக்கு 8-9 லட்சமாக இருக்கிறது என உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இப்படி இருக்கையில் புற்றுநோய்க்கு ஜோதிடம் மூலம் தீர்வு காணலாம் என தவறாக வழிநடத்தும் நபரை விஜய் வேட்பாளராக அறிவித்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல மறுபுறம், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், 11 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

அச்சுறுத்தும் புற்றுநோய்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் உலக சுகாதார மையம் இணைந்து, இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்பது குறித்து அதிர்ச்சி தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. புற்றுநோய் பாதிப்பை தாமதமாக அறிந்துக்கொள்வதுதான், உயிரிழப்பு மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. பாதிப்பை தெரிந்துக்கொள்ள வேண்டும் எனில், மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
அல்லது ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளில், புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் சிறப்பு தொழில்நுட்பங்களை கொண்டுவர வேண்டும். அதைத்தான் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருக்கிறது. இது புற்றுநோய் அச்சத்தை பெரிய அளவுக்கு கட்டுப்படுத்தும். மட்டுமல்லாது ஏற்கெனவே பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசியை அரசு விநியோகிக்க தொடங்கிவிட்டது.
தவெகவின் நகர்வு
இப்படி இருக்கையில், மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இந்த விஷயத்தை எப்படி அணுகியிருக்கிறார் என்பதற்கு உதாரணமாக அவரது வேட்பாளர் தேர்வு இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதாவது, கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் நிர்வாகி ஆர்.டி.கனிமொழி சந்தோஷை விஜய் அறிவித்திருக்கிறார்.
புற்றுநோயும் ஜோதிடமும்
கனிமொழி சந்தோஷ், சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில், கேன்சர் நோயாளிகள் குறித்து பேசியிருந்தார். அதாவது, "கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது சர்ஜரி செய்யலாம்? சர்ஜரி செய்யலாமா? வேண்டாமா? என்பது உட்பட ஜோதிடத்தில் தெரிந்துக்கொள்ளலாம். இது மட்டுமல்லாது முடி கொட்டுவதற்கும், PCOD, குழந்தையின்மை பிரச்சனைக்கும் ஜோதிடத்தில் தீர்வு இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
இந்தியாவின் நிலைமை
இந்தியாவை பொறுத்தவரை கேன்சர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது என்பது ஒருபுறம் எனில், மறுபுறம் குழந்தியின்மை பிரச்சனையை வைத்து காசு பார்க்கும் தனியார் மருத்துவமனைகளும் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருகின்றன. இதிலிருந்து சாமானிய மக்களை எப்படி காப்பாற்றுவது என்கிற புரிதல் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், தவெக வேட்பாளர் தேர்வை பார்த்தால் இந்த புரிதல் ஏதும் இல்லாததை போல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
-
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications