Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எப்ப பார்த்தாலும் சர்ச்சைதான்.. இவங்க சூர்யாவை மிரட்டல".. பாமகவை மீண்டும் சீண்டும் திருமாவளவன்

பாமக மீது திருமாவளவன் காட்டமான விமர்சனம் முன்வைத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக தனது அரசியல் அடித்தளத்தை இழக்கும் போதெல்லாம், அவை சர்ச்சையை உருவாக்குகின்றன.. இவர்கள் சூர்யாவை அச்சுறுத்தவில்லை, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலையே ஏற்படுத்தி வருகின்றனர் என்று திருமாவளவன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பாமகவுக்கு பதிலடி? Jai Bhim பிரச்சனை..Tirumavalavan-க்கு கடிதம் போட்ட Surya | Oneindia Tamil

    சில தினங்களாகவே ஜெய்பீம் விவகாரம் வெடித்து கிளம்பி வருகிறது.. பாமக இந்த விஷயத்தை விடுவதாக இல்லை.. கடுமையான கண்டனங்களை விடுத்து வரும் நிலையில், பாமக தொண்டர்களும் சோஷியல் மீடியாவில் சூர்யாவுக்கு மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
    இந்நிலையில், பாமகவின் அரசியலையும் வன்முறையையும் விசிக தலைவர் திருமாவளவன் கண்டித்து வருகிறார்..

     உள்நோக்கம்

    உள்நோக்கம்

    நேற்றுகூட செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஒருகுறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தக்கூடியதாக இருந்தால், அது கண்டிக்க வேண்டியதே.. அப்படி உள்நோக்கம் எதுவும் இல்லை என்று நடிகர் சூர்யா தெளிவுபடுத்தி இருக்கிறார்.. அதற்கு பிறகாவது பாமக தலைமை, தம்முடைய தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.. இத்தகைய போக்குகளை ஊக்கப்படுத்தக்கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..

     இளைஞர்கள்

    இளைஞர்கள்

    எந்த சமூகத்திற்காக பாடுபடுகிறோம் என்று சொல்கிறார்களோ அதே சமூகம் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் அக்காட்சி தலைமையில் நடந்து கொள்கிறது. ஒரு கட்சித் தலைமையே இவ்வாறு செயல்பட்டால் தொண்டர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்? இதனால் சமூகப் பதற்றம் ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. இது தடுக்கப்படவேண்டும் தவிர்க்கப்பட வேண்டும்" என்ற வேண்டுகோளையும் திருமாவளவன் விடுத்திருந்தார்.

     மிரட்டல்

    மிரட்டல்

    எனினும் பாமக மேலிடம் எந்தவிதமான நடவடிக்கையும் இது தொடர்பாக எடுக்கவில்லை என்றே தெரிகிறது.. சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் போக்கும் தொடர்ந்து நடந்து வருகிறது.. எங்க ஊருக்கு சூர்யா வந்தால், நாங்கேளே அவரை அடிப்போம், 1 லட்சம் ரூபாய்கூட எங்களுக்கு வேண்டாம் என்று சில பாமகவினர் ட்வீட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், மீண்டும் பாமகவை காட்டமாக விமர்சித்து, அறிவுறுத்தி உள்ளார் திருமாவளவன்.

     அச்சுறுத்தல்

    அச்சுறுத்தல்

    ஆங்கில டிவி சேனலுக்கு ஒன்றிற்கு திருமாவளவன் அளித்த பேட்டியில்,"பாமக தனது அரசியல் அடித்தளத்தை இழக்கும் போதெல்லாம், அவை சர்ச்சையை உருவாக்குகின்றன... அவர்கள் சூர்யாவை அச்சுறுத்தவில்லை, மாறாக இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலாகவே உள்ளது.. தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் பாமகவை எதிர்க்கின்றன.. மிரட்டல் விடுக்கும் இதுபோன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திருமாவளவன்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+