லாக்டவுன்: தடை இல்லாமல் இயங்கும் வேடசந்தூர் நூற்பாலைகள்- கூட்டமாக அழைத்து செல்லப்படும் தொழிலாளர்கள்!
திண்டுக்கல்: கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டாலும் வேடசந்தூர் பகுதி நூற்பாலைகள் மட்டும் இடைவிடாமல் இயக்கப்படுகின்றன. இந்த நூற்பாலைகளை இயக்குவதற்காக சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் கூட்டமாக கூட்டமாக தொழிலாளர்களை ஒரே வண்டியில் அடைத்து ஏற்றி வருவது இப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் தொகுதி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி. இதனை கருத்தில் கொண்டு வறட்சி பகுதியாக அறிவித்து வேடசந்தூர் சுற்றுவட்டாரங்களில் நூற்பாலைகள் அமைக்க 1980களில் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் சட்டசபை துணை சபாநாயகருமான மறைந்த வி.பி.பாலசுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனடிப்படையில் வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது 40க்கும் மேற்பட்ட நூற்பாலைகல் இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகளில் 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

பெண்களின் வாழ்வாதாரம்
வேடசந்தூர் தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 10 முதல் 20 பேர் இந்த நூற்பாலைகளில் ஷிப்ட்டுகள் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை அழைத்து வர கிராமங்களுக்கே வேன்களையும் நூற்பாலைகள் இயக்குகின்றன. இதனால் கிராமப்புற பெண்களுக்கு இந்த நூற்பாலைகள் வாழ்வாதரமாகவும் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை..

வடமாநில தொழிலாளர்கள் குவிப்பு
அண்மைக்காலமாக வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் இந்த நூற்பாலைகளில் குவிக்கப்பட்டனர். பல நூற்பாலைகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்வதும் இயல்பான ஒன்றாகியும் விட்டது.

காற்றில் பறக்கும் கட்டுப்பாடுகள்
தற்போதைய கொரோனா பரவல் காலத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிவிட்டனர். லாக்டவுன் காலத்திலும் நூற்பாலைகளை உரிமையாளர்கள் இடைவிடாமல் இயக்குகின்றனர். இதற்காக கிராமங்களில் இருந்து பெருமளவு பெண் தொழிலாளர்கள் ஒரே வாகனத்தில் எந்த வித சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் அழைத்துச் செல்கின்றனர்.

நூற்பாலை வாகனங்களுக்கு தடை இல்லை
இந்த பகுதியில் பொதுவாக வாகனப் போக்குவரத்துக்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்து ஆய்வு நடத்துகின்றனர். ஆனாலும் நூற்பாலைகளின் பெயரால் ஆம்னி பேருந்துகள், வேன்கள் எந்தவித தடையும் இல்லாமல் இயல்பாகவே இயக்கப்பட்டு வருகின்றன. லாக்டவுன் என்பதே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே என்கிறது அரசு.

கிராமங்களில் கொரோனா அச்சம்
ஆனால் லாக்டவுன் காலத்திலும் தொழிலாளர்களை இப்படி சமூக இடைவெளியின்றி கூட்டமாக நூற்பாலைகளுக்கு அழைத்துச் செல்வதால் தங்களது கிராமங்களுக்கும் கொரோனா பரவுமோ என்கிற அச்சம் வேடசந்தூர் சுற்றுவட்டார கிராம மக்களிடையே எழுந்துள்ளது. மக்களின் இந்த பேரச்சத்தைப் போக்க வேண்டியதும் தமிழக அரசின் கடமை என்பது வேடசந்தூர் சுற்றுவட்டார மக்களின் வேண்டுகோள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications