இந்தி பேசினால் பலாத்காரம் செய்ய மாட்டார்கள்.. அதிர வைத்த பாஜக பெண் நிர்வாகி!
சென்னை: பெண்கள் வட இந்தியாவுக்கு செல்லும்போது இந்தி தெரிந்து இருந்தால் இந்தியில் கெட்ட வார்த்தை பேசி தங்களை தற்காத்துக்கொள்ள முடியும் என பாஜக மாநில விளையாட்டுப்பிரிவு செயலாளர் அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜகவை தமிழ்நாட்டில் வளர்க்க பல்வேறு உத்திகளை கையில் எடுத்து வருகின்றனர். அதன் படி பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் கட்சியில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக சினிமா, சின்னத்திரை நடிகர்கள், விளையாட்டுத் துறையினர், சமூக வலைதளங்கள் பிரபலமாக இருப்பவர்கள் என பலரை பாஜக தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது.

சினிமா துறையினர்
சினிமா துறையை சேர்ந்த நடிகர் ராதாரவி, நடிகை கவுதமி, நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், நடிகர் பொன்னம்பலம், நடிகைகள் மதுவந்தி, நமிதா என பலர் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கின்றனர்.

அலிசா அப்துல்லா
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பிரபல கார் மற்றும் பைக் பந்தைய வீராங்கனையான அலிஷா அப்துல்லா பாஜகவில் இணைந்தார். 'தமிழ்நாடு பாஜக குடும்பத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அண்ணாமலையும் அமர்பிரசாத் ரெட்டியும் அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்து இருக்கிறேன்.

நேர்காணல்
பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னால் இயன்றதை செய்வேன்.' என்று அவர் உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து அலிசா அப்துல்லாவுக்கு பாஜக மாநில விளையாட்டுப்பிரிவு செயலாளர் பதவி கிடைத்தது. இதனை தொடர்ந்து பாஜகவுக்கு பல்வேறு நேர்காணல்களில் அவர் பேசி வருகிறார்.

இந்தி 3வது மொழி
அந்த வகையில் கடந்த மாதம் அவர் அளித்த பேட்டி தற்போது அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தி மொழி தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தி 3 வது மொழியாக இருக்க வேண்டும். ஏனென்றால் பாதுகாப்பு முக்கியம். நான் பெண்களுக்காக பேசுகிறேன். தமிழ்நாட்டில் பாதுகாப்பு உள்ளது. ஆனால், வட மாநிலங்களில் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது.

இந்தி தெரிந்தால் தைரியம்
இதுவே இந்தி தெரிந்திருந்தால் தைரியமாக இந்தி பேசிவிட்டு தப்பிக்க முடியும். ஆனால், தமிழை வைத்துக்கொண்டு அங்கு எதுவும் செய்ய முடியாது. இந்திகாரர்கள் தமிழ்நாடு வந்தார்கள் என்றால், அவர்களால் இந்தியை தாக்குப்பிடிக்க முடியாது. நமக்கு தேசிய மொழி வேண்டும். அதே நேரம் தமிழில் அதிக கவனம் செலுத்தக்கூடாது.

பலாத்காரத்திலிருந்து தப்பிக்கலாம்
இந்தி, தமிழ் படிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது அவர்கள் விருப்பம். நீங்கள் இரவு 9 மணிக்கு ஐதராபாத்திலோ, டெல்லியிலோ நடந்து செல்கிறீர்கள். அப்போது 4 பேர் உங்களிடம் தகராறு செய்தால் அவர்களிடம் நீங்கள் இந்தியில் கெட்ட வார்த்தையில் பேசினாலோ, இந்தியில் கத்தினாலோ தப்பி முடியும்." என்றார். இதனை பகிர்ந்து பலர் அலிசாவை விமர்சித்து வருகின்றனர்.
-
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
உங்க விஜய் நான் வர்றேன்.. தனித்தே களமிறங்கும் தவெக! எந்த தொகுதியில் யார் யார் போட்டி? லீக்கான தகவல்! -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
நெக்ஸ்ட் சிஎம் விஜய்? டெல்லிக்கு போன நேரத்தில் வெளியான கருத்து கணிப்பு! ப்ளான் பண்ணி பண்ணிய பனையூர்! -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications