மகாபலிபுரம் தனியார் ஓட்டலில் ஒரே நொடி தான்.. பிளஸ் 2 மாணவனுக்கு நினைத்தே பார்க்க முடியாத சம்பவம்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு கிழக்கு கடற்கரை சாலையையொட்டி தனியார் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலுக்கு முகப்புப் பகுதியில் பெயர் பலகை அமைப்பதற்கு முடிவு செய்தனர். இந்த வேலைக்காக 12 வகுப்பு படிக்கும் மாணவன் உள்பட இரண்டு இளைஞர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அடுத்த சில நாளில் பரிட்சை எழுத வேண்டிய 12ம் வகுப்பு மாணவன் வேலைக்கு வந்ததால் என்ன நடந்தது தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
இன்றைய சூழலில் படிக்கிற வயதில் வேலைக்கு செல்வது சாதாரணமாக இருக்கிறது. ஏனெனில் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் படிக்கிற வயதில் வேலைக்கு போகிறார்கள். வேலை செய்து கொண்டே படிக்கிறார்கள். அப்படி படித்த ராஜேஷ், இன்னும் சில நாளில் பிளஸ் 2 தேர்வு எழுத தயாராகி வந்தார். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை. என்ன நடந்தது.

ஓட்டல் பெயர் பலகை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு கிழக்கு கடற்கரை சாலையையொட்டி தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலின் முகப்புப் பகுதியில் பெயர் பலகை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அகமது என்பவர் ஒப்பந்தம் எடுத்தார். அந்த வேலையை செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் 2 நபர்களை வேலைக்கு அழைத்து வரச் சொன்னார். அதன் பேரில் ராஜேஷ் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த, செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த பிரவீன் (வயது 18), மற்றும் அரசு (22) இருவரையும் அழைத்து வந்துள்ளார்.
மின் கம்பி
பிரவீன், அரசு இருவரும் அந்த தனியார் நட்சத்திர ஓட்டலின் முகப்பில் பெயர் பலகை பொருத்துவதற்காக அங்கிருந்த 15 அடி உயர அலுமினிய ஏணியை நகர்த்தி உள்ளார்கள். மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசி இருவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் பிரவீன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விரைந்து வந்த போலீஸ்
இளைஞர் அரசு படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அரசுவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பிரவீன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மறைமலைநகர் மக்கள்
மேலும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பிரவீன் ஊரான மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அவரது உறவினர்கள் அந்த தனியார் ஓட்டல் முன்பு திரண்டனர். 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுவனுக்கு எந்த ஆவணத்தை வைத்து வேலை கொடுத்தார்கள், இன்னும் ஓரிரு நாட்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுத உள்ளார். அவரது உயிரை உங்களால் மீட்டுத் தர முடியுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி ஓட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.இதனால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications