சூப்பர்! கேஸ் சிலிண்டர் விடுங்க, தமிழகத்தில் எலக்ட்ரிக் ஸ்டவ் தரும் நன்மை.. கரண்ட் பில் உயருமா?
சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மின்சார அடுப்புகளுக்கு டிமாண்டு எகிறி வருகிறது.. இந்த மின் அடுப்புகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? கேஸ் சிலிண்டரை விட மின் அடுப்புகளை பயன்படுத்துவது எளிதானதா? மின் கட்டணம் அதிகமாக வாய்ப்புள்ளதா? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 'சேப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கட்' போன்ற முன்னணி ஆன்லைன் டெலிவரி செயலிகளில் மின்சார அடுப்புகளின் இருப்பு மிக வேகமாகத் தீர்ந்து வருகின்றன.. ஆன்லைனில் ஆர்டர் செய்ய முயலும் வாடிக்கையாளர்கள் பலருக்கு ஸ்டாக் இல்லை என்ற செய்தியே கிடைக்கிறது..

எலக்ட்ரிக் ஸ்டவ் பயன்பாடு
சென்னையில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள், ஒருவேளை உணவகங்கள் மூடப்பட்டால் சமையல் செய்ய சிக்கல் ஏற்படும் என்பதால் இப்போதே மின் அடுப்புகளை வாங்கி சேமிக்க தொடங்கி விட்டார்களாம்.. சில்லறை விற்பனை கடைகளிலும் ஒரு நாளைக்கு ஐந்து அடுப்புகள் விற்ற இடத்தில், இப்போது அதன் விற்பனை மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்..
மின் அடுப்புகளை பயன்படுத்துவதில் சில சாதகமான விஷயங்கள் உள்ளன.. இதில் சமைக்கும்போது வெப்பம் வீணாகாமல் நேரடியாக பாத்திரத்திற்கு செல்வதால் சமையல் மிக விரைவாக முடியும்.. மேலும், கேஸ் கசிவு போன்ற விபத்து அபாயங்கள் இதில் இல்லை என்பது பெரிய பிளஸ் பாயிண்ட்.. நவீன வசதிகளுடன் வரும் இந்த இண்டக்ஷன் ஸ்டவ் அடுப்புகளில் நேரத்தைக் கட்டுப்படுத்தும் டைமர் வசதி இருப்பதால் பால் பொங்குவது போன்ற கவலைகள் எதுவும் இல்லாமல் சமைக்கலாம்.. பராமரிப்பதும் மிகவும் எளிது..
மின்சார அடுப்புகள்
இருந்தாலும்,. சில பாதகங்களும் இதில் இருக்கவே செய்கின்றன.. இண்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு பிரத்யேகமான இண்டக்ஷன் பேஸ் கொண்ட பாத்திரங்கள் மட்டுமே பயன்படும்.. சாதாரண அலுமினிய பாத்திரங்களை இதில் பயன்படுத்த முடியாது..
அதுவும் இல்லாமல், மின்சார கட்டணம் உயரும் அபாயமும் உள்ளது.. மின் தடை ஏற்படும் நேரங்களில் இந்த அடுப்புகளை பயன்படுத்த முடியாது என்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும்.. கிராமப்புறங்களில் மின்வெட்டு அதிகமாக இருந்தால் இது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகிவிடும்..
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் மக்கள் பீதியடைந்து ஒரே நேரத்தில் கடைகளில் குவிவது தேவையற்றது.. இது சந்தையில் செயற்கையான விலையேற்றத்திற்கே வழிவகுக்கும்..
எனவே அரசு தரப்பில் சிலிண்டர் இருப்பு குறித்து முறையான விளக்கம் அளித்தால் மட்டுமே இந்தப் பதற்றம் குறையும்.. அதேநேரம், பேரிடர் காலங்களில் அல்லது இது போன்ற தட்டுப்பாட்டு நேரங்களில் எலக்ட்ரிக் அடுப்பு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. நுகர்வோர் மின் அடுப்புகளை வாங்கும்போது தரமான ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற சாதனங்களை வாங்கிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது அவசியமாகும்..
யூனிட் கரண்ட் பில்
சாதாரணமாக ஒரு இண்டக்ஷன் ஸ்டவ் 1,200 வாட்ஸ் முதல் 2,000 வாட்ஸ் வரை மின்சாரத்தை பயன்படுத்தும்.. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மணிநேரம் இந்த மின் அடுப்பை தொடர்ந்து பயன்படுத்தினால், தோராயமாக 1.5 யூனிட் முதல் 2 யூனிட் வரை மின்சாரம் செலவாகும்.. மாதத்திற்கு என்று கணக்கிட்டால் 45 முதல் 60 யூனிட்டுகள் வரை கூடுதலாக வர வாய்ப்புள்ளது..
தமிழகத்தின் மின்சாரக் கட்டண அடுக்குகளை பொறுத்து, நீங்கள் ஏற்கனவே அதிக யூனிட்கள் பயன்படுத்துபவர் என்றால், இந்த கூடுதல் யூனிட்டுகள் உங்கள் மொத்த பில்லை சற்று உயர்த்தவே செய்யும்..
இருந்தாலும், கேஸ் சிலிண்டர் விலையோடு ஒப்பிடும்போது மின்சார அடுப்பு சிக்கனமானது என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.. காரணம், மின் அடுப்பில் வெப்பம் வீணாகாமல் நேரடியாகப் பாத்திரத்திற்குச் செல்வதால் சமையல் மிக விரைவாக முடிந்துவிடும்.. ஒரு லிட்டர் தண்ணீரை மின் அடுப்பில் கொதிக்க வைக்க 3 முதல் 4 நிமிடங்கள் மட்டுமே ஆகும், இது கேஸ் அடுப்பை விட வேகமானது.. இதனால் நேரம் மிச்சமாவதுடன், ஆற்றலும் சேமிக்கப்படுகிறது..
மக்கள் எடுத்த ரிஸ்க்
மின்சாரக் கட்டணத்தை குறைக்க சில எளிய முறைகளைக் கையாளலாம்.. சமைப்பதற்கு முன்பே காய்கறிகளை நறுக்கித் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.. இண்டக்ஷன் ஸ்டவ் ஆன் செய்த பிறகு காய்கறி நறுக்கினால் தேவையற்ற மின் விரயம் ஏற்படும்.. அதேபோல், தட்டையான அடிப்பாகம் கொண்ட சரியான இண்டக்ஷன் பாத்திரங்களைப் பயன்படுத்தினால் வெப்பம் சீராகப் பரவி மின் நுகர்வை குறைக்கும்..
சுருக்கமாகச் சொன்னால், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் அல்லது அதன் விலை உயரும்போது, மின்சார அடுப்பு ஒரு லாபகரமான மாற்றாகவே இருக்கும்.. ஆனால், பழைய மாடல் மின் அடுப்புகளை தவிர்த்து, நவீன பவர் சேவிங் டெக்னாலஜி கொண்ட அடுப்புகளை தேர்ந்தெடுப்பது உங்கள் மின்சாரப் பில்லைக் கட்டுக்குள் வைக்க உதவும்..!!
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications