போன் செய்தது உண்மைதான்.. துரைமுருகனிடம் போனில் பேசியது என்ன? சுதீஷ் பரபரப்பு விளக்கம்!
திமுக பொருளாளர் துரைமுருகனிடம் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் போனில் பேசியது என்ன என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகனிடம் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் போனில் பேசியது என்ன என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.
தேமுதிக - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது பெரிய சர்ச்சையிலும், பரபரப்பிலும் முடிந்து இருக்கிறது. தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் திமுக பொருளாளர் துரைமுருகனிடம் போனில் பேசியது என்ன என்பதுதான் தற்போது பெரிய கேள்வியாக உள்ளது.
தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். திமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
ஸ்டாலினை எழுப்பி பேசும் அளவுக்கு தேமுதிக ஒரு மேட்டரே இல்ல.. துரைமுருகன் தடாலடி.. அதிரடி
நிர்வாகிகள் பேட்டி
இந்த சந்திப்பில் தேமுதிக நிர்வாகிகள் சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் முதலில் விளக்கம் அளித்தனர். அதில், திமுக பொருளாளர் துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காக பார்க்க சென்றோம். நாங்கள் அரசியலே பேசவில்லை.மரியாதை நிமித்தமாக துரைமுருகனை சந்தித்தோம். துரைமுருகனிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. நாங்கள் துரைமுருகனை சந்தித்தது சுதீஷுக்கு தெரியாது, என்றனர்.
சுதீஷ் பேட்டி
அதன்பின் பேசிய சுதீஷ், திமுகவுடன் தேமுதிக பேசுவதாக எல்லோரும் கூறுகிறார்கள். நாங்கள் முதலில் பாஜகவுடன் கூட்டணி குறித்தும் பேசினோம். பாஜகவினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால், நாங்களும் அதிமுகவுடனும் பேசினோம். பாமகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, எங்களுடனும் ஒப்பந்தம் செய்திருக்கலாம்.
வருத்தம்தான்
பாமகவுடன் செய்தது போல அதிமுக எங்களுடன் ஒப்பந்தம் செய்யாதது வருத்தம் அளித்தது. ஒரே நாளில் ஒப்பந்தம் செய்து இருக்கலாமே. திமுக அதன்பின் எங்களுடன் பேசியது. எங்கள் வீட்டிற்கு வந்து கூட்டணி குறித்து பேசினார்கள்.
எதிர்க்கவில்லை
பாமக - அதிமுக கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் ஆலோசனை செய்ய கூடாதா.? நானும் துரைமுருகனும் பக்கத்து பக்கத்து ஊர். நாங்கள் பேச நிறைய விஷயம் இருக்கிறது. நாங்கள் அரசியல் மட்டும்தான் பேச வேண்டுமா சொல்லுங்கள். நாங்கள் பலமுறை சந்தித்து இருக்கிறோம்.
உண்மையை சொல்லட்டுமா
நான் துரைமுருகனுக்கு போன் செய்தது உண்மைதான். நேற்று துரைமுருகன் என்னிடம் பேசியதை நான் சொல்லட்டுமா. துரைமுருகன் அவரின் கட்சியை பற்றி பேசியதை சொல்லட்டுமா. துரைமுருகன் அவரின் தலைமை குறித்து பேசியதை சொல்லட்டுமா. உண்மைகளை சொன்னால் அசிங்கமாகிவிடும், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.