நான் ரொம்ப நாளாவே எச்சரிக்கிறேன்.. நடக்குற நிகழ்வு உறுதிப்படுத்துது.. கோவை சம்பவம் பற்றி சசிகலா பரபர!
கோவை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, திமுக தலைமையிலான ஆட்சியாளர்கள் இதை கட்டுப்படுத்த தவறுகிறார்கள் என்பதை நான் வெகுநாட்களாக எச்சரித்து வருகிறேன். தமிழகத்தில் சமீப காலமாக நடைபெறும் நிகழ்வுகள் இதனை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், எந்தவிதமான புற அழுத்தங்களுக்கும் இடம் அளித்திடாமல், துரிதமாக செயல்பட்டு, நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் பலியானார். முதலில் இச்சம்பவம் விபத்து எனக் கருதப்பட்ட நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக பாஜக தலைவர்கள், ஓபிஎஸ், ஈபிஎஸ் என பலரும் திமுக அரசின் சட்டம் ஒழுங்கை விமர்சித்து வரும் நிலையில், சசிகலாவும், திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெகுநாட்களாக எச்சரிக்கிறேன்
கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, திமுக தலைமையிலான ஆட்சியாளர்கள் இதை கட்டுப்படுத்த தவறுகிறார்கள் என்பதை நான் வெகுநாட்களாக எச்சரித்து வருகிறேன். தமிழகத்தில் சமீப காலமாக நடைபெறும் நிகழ்வுகள் இதனை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது.

கோவை கார் வெடிப்பு
கோவை மாநகரில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் வாசல் முன்பு, தீபாவளி பண்டிகைக்கு முன்தினம் அதிகாலை காரில் எரிவாயு சிலிண்டர் வெடித்து, அதில் ஒருவர் கருகி உயிரிழந்திருப்பதாக முதலில் செய்தி வந்தது. அதன்பின்னர், அதில் உயிரிழந்தவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தில் ஏராளமான ஆணிகள், கோலிகுண்டுகள் மற்றும் பால்ரஸ் குண்டுகள் சிதறி கிடந்ததாகவும், இது தொடர்பாக 5 நபர்களை கைது செய்து இருப்பதாகவும் செய்திகள் வருகிறது.

சதிச் செயலா?
இந்த சம்பவம் அனைவருக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட விபத்தா? அல்லது எதாவது திட்டமிட்ட சதிச்செயலா? என்பதை தமிழக காவல்துறை தெளிவுபடுத்திட வேண்டும். மேலும், ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு வெளிப்படைத்தன்மையோடு விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று இந்த ஆட்சியாளர்களை கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதுபோன்று மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்புடைய சம்பவங்கள் குறித்து பொதுவெளிகளில் யார் பேசினாலும் மிகவும் கவனமுடன் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டும்.

அனுபவபூர்வமாக
ஏனென்றால், அவர்கள் தங்களது கருத்துக்களால் தொடர்ந்து நடைபெறுகின்ற விசாரணைகளுக்கு ஏதும் இடையூறு ஏற்படுத்தி விடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும், அனைத்தையும் பொதுவெளியில் பேசிவிட்டால், அது அந்த குறிப்பிட்ட வழக்கின் விசாரணைகளையே நீர்த்துப்போக செய்து விடலாம். அதுமட்டுமல்ல நம் மாநிலத்தின் பாதுகாப்புக்கும் எதாவது ஒரு வகையில் ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். இது இத்தனை வருடங்களில் எனது அனுபவபூர்மாக நான் கற்றுக்கொண்டது.

ஜெயலலிதாவுடன் பயணித்தபோது
ஜெயலலிதாவோடு பயணித்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத நேரங்களிலும், நம்மிடம் வரும் தகவல்களை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த விதத்திலும் குந்தகம் ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறோம். திமுக தலைமையிலான அரசு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கின்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து விழிப்புடன் செயலாற்ற வேண்டும். தமிழக எல்லைகளில் எந்தவித அந்நிய சக்திகளும் ஊடுருவ இயலாத வகையில் கண்காணிப்புகளை பலப்படுத்திட வேண்டும்.

புற அழுத்தங்களுக்கு இடம் அளித்திடாமல்
இதுபோன்ற விஷயங்களில் ஜெயலலிதா எவ்வாறு உறுதியான முடிவுகளை எடுத்து இரும்புக்கரம் கொண்டு தமிழகத்தை பாதுகாத்தாரோ, அதே போன்று, இன்றைய ஆட்சியாளர்கள், தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி, தமிழகம் அமைதி பூங்காவாக விளங்கிட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே, திமுக தலைமையிலான அரசு, கோவை கார் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், எந்தவிதமான புற அழுத்தங்களுக்கும் இடம் அளித்திடாமல், துரிதமாக செயல்பட்டு, நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஒரு கை பார்த்துற வேண்டிதான்.. பலத்தை காட்ட தயாராகும் சீனியர்கள்! சசிகலாவுடன் கைகோர்க்கும் ராமதாஸ்? -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications