கோத்தபாய ராஜபக்சே நாளை இலங்கை திரும்புகிறார்.. ரணிலுக்கு நெருக்கடி- மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்?
கொழும்பு: தாய்லாந்தில் வீட்டு சிறையில் இருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாளை கொழும்பு திரும்புகிறார். இதனால் இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பொருளாதாரப் பேரழிவை சீரமைக்காமல், மக்கள் புரட்சியை எதிர்கொள்ள முடியாமல் அந்நாட்டை விட்டு தப்பி ஓடியவர் கோத்தபாய ராஜபக்சே. முதலில் மாலத்தீவு, பின்னர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருந்தார் கோத்தபாய. தற்போது தாய்லாந்தில் குறுகிய கால அனுமதியுடன் வீட்டுச் சிறையில் உள்ளார் கோத்தபாய ராஜபக்சே.

கோத்தபாயவுக்கு உலகின் எந்த ஒரு நாடும் அடைக்கலம் தர முன்வரவில்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் இலங்கை திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கோத்தபாய. இது தொடர்பாக இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுடன் தொலைபேசியில் கோத்தபாய ராஜபக்சே ஆலோசனை நடத்தினார்.
மேலும் கோத்தபாயவின் வீடு உள்ளிட்ட இடங்களில் 8 அடுக்கு பாதுகாப்புகளுக்கு ரணில் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. கோத்தபாயவுக்கு எதிராக எந்த ஒரு சிறு ஆர்ப்பாட்டமும் நடத்தவிடக் கூடாது என்பதில் ரணில் முனைப்பாக உள்ளார்.
இதனிடையே இலங்கையில் எந்த ஒரு மக்கள் கிளர்ச்சியும் நடைபெறாத வகையில் ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கம், அடக்குமுறைகளை ஏவிவிட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மாளிகை உள்ளிட்ட இடங்களைக் கைப்பற்றியவர்கள், காலி முகத் திடல் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என அனைவரும் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரணில், ஜனாதிபதியான நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரங்களைத் தாண்டிவிட்டது.
இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளார். இலங்கை திரும்பும் அவர், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. தமது ஆதரவு எம்.பி. ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து நியமன எம்.பியாகி பிரதமராவது என கோத்தபாய திட்டமிட்டுள்ளாராம். இதற்கு ரணில் விக்கிரமசிங்கே முழுமையான ஆதரவு தெரிவித்திருக்கிறாராம்.
அதேநேரத்தில் கோத்தபாய இலங்கைக்கு மீண்டும் திரும்பி அரசியலில் ஈடுபட்டால் மக்கள் மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபடவும் வாய்ப்பிருக்கிறது. தற்போதைய ரணில் அரசாங்கம், அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டால் இலங்கையில் ரத்த ஆறுதான் மூடும் எனவும் மூத்த பத்திரிகையாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications