அப்பாடா! பெருமூச்சு விட்ட இலங்கை.. ரூ.23,000 கோடி கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல்!
கொழும்பு: பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் (சுமார் ரூ.23,000 கோடி) கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்துள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. தவறான பொருளாதாரக் கொள்கைகள், கொரோனா ஊரடங்கு, சீனாவிடம் இருந்து வரைமுறையின்றி பெறப்பட்ட பல லட்சம் கோடி கடன் போன்ற காரணங்களால் இலங்கை பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு சரிந்தது. இதனால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், பெட்ரோல் - டீசல் எரிபொருட்கள் ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதன் காரணமாக, ஏழை - நடுத்தர மக்கள் மூன்று வேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் சூழல் உருவானது.

தொடர் பட்டினி மற்றும் பஞ்சத்தால் கொந்தளித்து போன இலங்கை மக்கள் நாடே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக, இந்தப் போராட்டம் ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக திரும்பியது. இதையடுத்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதிபர் பதவியை கோட்டாபய ராஜபட்சவும், பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்சவும் ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகினர்.
இதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், சர்வேதச நிதியத்திடம் இருந்து 5 பில்லியன் டாலரை (ரூ.40,000 கோடி) கடனுதவியாக வழங்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் முதலில் இதற்கு சர்வதேச நிதியம் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் இலங்கை பிரதிநிதிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் சம்மதித்தது. இதற்கான அறிவிப்பை அது இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, இலங்கைக்கு 2.3 பில்லியன் டாலரை, அதாவது ரூ.23 ஆயிரம் கோடியை கடனுதவியாக வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைக்கு வழங்கப்படும் இந்த கடனுதவியின் மூலம் அந்நாட்டு அரசுக்கு கிடைக்கும் வருவாயை பல மடங்கு அதிகரிக்க முடியும். மேலும், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கு புதிய விலையை நிர்ணயிக்கவும் இந்தக் கடனுதவி உதவும். அதுமட்டுமின்றி, இலங்கை மத்திய வங்கி தன்னிச்சையாக இயங்குவதற்கும், இலங்கையின் அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கும் இந்த நிதி வழிவகுக்கும். அதேபோல, தனிநபர் வரியைும், பெரு நிறுவன வரியையும் முறையாக பயன்படுத்தவும் இலங்கைக்கு இந்த நிதி பேருதவியாக இருக்கும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications