பாகிஸ்தானையடுத்து இலங்கை! நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பெருகும் ஆதரவு! பதவியை இழக்கும் ராஜபக்ச&கோ
கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான உறுப்பினர்களை விட அதிக ஆதரவு இருப்பதாக கோத்தபய ராஜபக்சவால் நீக்கப்பட்ட இலங்கை அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் வரலாறு காணாத விலையேற்றம் ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன
மேலும் எரிபொருள், மருந்துகள் மற்றும் மின்சார விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த ஏப்ரல் 9 முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.

கோத்தபய ராஜபக்ச
கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி, அதிபர் மாளிகைக்கு எதிரே முன்னெடுக்கப்பட்ட போராட்டம் திங்கட்கிழமையான இன்று பதினேழாவது நாளை எட்டியது. இதனிடையே உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடனும், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும் நிதி உதவிக்காக இலங்கை பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அதிகரித்த கடன்கள்
ஆனாலும் இலங்கையின் ஜனாதிபதி முறைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை இலங்கையின் எதிர்க்கட்சி முன்மொழிந்துள்ளது. இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உதவியாக 500 மில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கு இந்தியா உறுதி அளித்துள்ள நிலையில், மற்ற நாடுகளின் உதவியை எதிர்நோக்கி இலங்கை காத்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தயார்
இந்நிலையில் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற தேவையான 113 உறுப்பினர்களை விட அதிக ஆதரவை பெற்றுள்ளதாக, தனது விமர்சனக் கருத்துக்களுக்காக அமைச்சரவையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நீக்கப்பட்ட இலங்கை அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று கோத்தபய கூறியிருந்த நிலையில், அவரது இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெறுவது உறுதி
அப்போதைய நிதியமைச்சரும் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்சவை வெளிப்படையாக விமர்சித்தமைக்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட எரிசக்தி அமைச்சர் பதவியை உதய கம்மன்பில, அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக பிரிந்து செல்வதாலும், பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய , மார்க்சிஸ்ட் ஜனதா விக்முதி பெரமுன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடனும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது உறுதி என்றும் கம்மன்பில கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications