சார் பெயர் மணிகண்டன்.. வச்சிருக்கிறது லேப்.. செய்த வேலையை பார்த்தீங்களா.. பதறிப்போன மனைவி!
கடலூர்: கடலூர் அருகே காதல் மனைவி 2 மகன்கள் இருக்கும் நிலையில் லேப் டெக்னீசியனின் பெயர் இன்னொரு பெண்ணின் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை என குறிப்பிடப்பட்டது. இதன்மூலம் இருவருக்கு இடையேயான கள்ளத்தொடர்பு வெளியானது. லேப் டெக்னீசியனை போலீசார் தேடுகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் மலர்கண்ணன். இவர் சித்ரா, என்பவரை காதலித்தார்.
இருவரும் 2009ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மலர்கண்ணன் கடலூர், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் லேப்கள் வைத்து நடத்துகிறார்.

லேப்களில் பெண்கள்
இவர் சுகாதார நிலையத்துக்கு பணிக்கு செல்வதால் லேப்களில் பெண்களை பணிக்கு அமர்த்தினார். இந்நிலையில் சில பெண்களிடம் அவர் காதலை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து சித்ரா அதிர்ச்சியடைந்தார். மலர்கண்ணனை கண்டித்தார். இதனால் அவர் கோபமடைந்தார். இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

வரதட்சணை கொடுமை
இதற்கிடையே வரதட்சணை வாங்கி வரும்படி சித்ராவிடம், மலர்கண்ணன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்தததால் தனக்கு நிகழும் சம்பவங்களை பெற்றோரிடம் கூட முடியாமல் சித்ரா தவித்தார். இதனால் வீட்டிலேயே கண்ணீர் விட்டு அழுதபடி கணவர் மலர்கண்ணனின் கொடுமைகளை சகித்தபடி இருந்தார்.

பிறப்பு சான்றிதழில் பெயர்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலர் கண்ணன் லேபில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் மலர்கண்ணன் பெயர் தந்தை என குறிப்பிடப்பட்டு இருந்தது. இருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக சித்ரா உறுதி செய்தார்.

போலீசில் புகார்
சம்பவம் குறித்து மலர்கண்ணனிடம் கேட்டார். அவர் சரியாக பதிலளிக்கவில்லை. மாறாக சித்ராவை அடித்து வீட்டைவிட்டு துரத்தினார். செய்வதறியாது தவித்த சித்ரா சம்பவம் குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் வரதட்சணை கொடுமை உள்பட சில பிரிவுகளில் மலர்கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தன்மீது புகார் அளிக்கப்பட்டு இருப்பதை அறிந்த மலர்கண்ணன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடுவருகின்றனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications