நீர் நிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு.. தீக்குளிக்க முயன்ற மக்கள்.. விருத்தாசலத்தில் பரபரப்பு
கடலூர்: விருத்தாசலத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிலர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தாசில்தார் தனபதி, நகராட்சி கமிஷனர் சேகர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர், கடந்த 23ஆம் தேதி முதல் முல்லா ஏரியிலிருந்து கடைகளை அகற்றும் பணியை தொடங்கினர். முதற்கட்டமாக, கடைகளின் முகப்பு பகுதிகள் மட்டும் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதிகாரிகளிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து வட்டாட்சியர் தனபதி, நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள கடை வீடுகளை தாங்களே முன்வந்து காலி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்படி காலி செய்யாவிட்டால், ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகள் மற்றும் வீடுகளை இடிக்கும் நிலை ஏற்படும் என உரிமையாளர்களை எச்சரித்தார்.
இந்நிலையில், கடலூர் ரோடு இந்திரா நகரில் உள்ள முல்லா ஏரி மற்றும் ஆலடி ரோட்டில் உள்ள நீர்நிலை களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகளை அகற்ற அதிகாரிகள், இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் வீடுகள் மற்றும் கடைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென்று இந்திரா நகர் பகுதியில் இருந்து இருபதுக்கும் மேற்பட்டோர், மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுக்க முயன்ற காவலர் ஒருவருக்கு கண்ணெரிச்சல் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இப்பகுதியில் பதட்டம் நிலை வருவதால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, சிலர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications