ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தால் 5 சதவீத ஜிஎஸ்டி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தால் கேன்சலேஷன் கட்டணத்துடன் 5 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீண்ட தூர பயணத்துக்கு பணக்காரர்கள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தும் நிலையில் ஏழை, நடுத்தர மக்கள் ரயில் பயணத்தை தான் நம்பியுள்ளனர். இதனால் ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலிலும் கூட பயணிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப ஒவ்வொருவரும் பயணம் செய்கின்றனர். முன்பதிவு செய்யாமல் குறைந்த டிக்கெட் கட்டணத்தில் சாதாரண பெட்டியில் பொதுமக்கள் பயணம் செய்யும் வேளையில், டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர். ஏசி, செகண்ட் கிளாஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

5 சதவீத ஜிஎஸ்டி கட்டணம்
இந்நிலையில் தான் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு அதனை ரத்து செய்யும் பயணிகளிடம் இருந்து கேன்சலேஷன் கட்டணமாக குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டணத்துடன் சேர்த்து 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் கடந்த 3ம் தேதி வழிக்காட்டுதல்களை வெளியிட்டு இருந்தது.

கேன்சலேஷன் கட்டணத்துடன் ஜிஎஸ்டி
இதையடுத்து தற்போது டிஆர்யூ எனும் ரயில்வேயின் வரி ஆய்வு பிரிவு (TRU)சுற்றறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்வது என்பதை இந்தியன் ரயில்வே ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்கிறது. இதுவரை ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால் கேன்சலேஷன் கட்டணம் மட்டும் பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது அதனுடன் சேர்த்து ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்பட உள்ளது.

ஜிஎஸ்டி தொகை எவ்வளவு?
அதன்படி முதல் வகுப்பு அல்லது ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து அதனை ரத்து செய்பவர்களிடம் மட்டுமே ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி ஏசி அல்லது முதல் வகுப்பு ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரூ.240 கேன்சலேஷன் கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதற்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்து ரூ252 ஆக வசூலிக்கப்படும்.

செகண்ட் ஸ்லீப்பருக்கு இல்லை
இருப்பினும் இந்த ஜிஎஸ்டி பிடித்தம் செய்யும் நடைமுறை செகண்ட் ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வசதி கொண்டு டிக்கெட்டுகளுக்கு பொருந்தாது'' என ரயில்வே வரி ஆய்வு பிரிவு சார்பில் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்துக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications