Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ் கூட சரியா ஓடாதா? ஆனாலும் "ஸ்பைஸ் ஜெட்" பயணிகள் பாவம் பாஸ்.. நடந்தே போன மக்கள்.. கொடுமை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கிய பின்னர் பயணிகளை அழைத்து செல்ல சுமார் 45 நிமிடங்களாக பேருந்து வராததால் பயணிகள் நடந்தே டெர்மினலுக்கு சென்றனர்.

ஏற்கெனவே ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பிரச்னையும் மேலெழுந்துள்ளது.

Back in controversy? SpiceJet made passengers walk; DGCA investigation

இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பொதுவாக விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளை விமானங்களிலிருந்து டெர்மினலுக்கு அழைத்து செல்ல பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு அபாயம் உள்ளதால் பயணிகள் நடக்க அனுமதி இல்லை. எனவே வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கிய பின்னர் பயணிகளை அழைத்து செல்ல சுமார் 45 நிமிடங்களாக பேருந்து வராததால் பயணிகள் டெர்மினலுக்கு நடந்தே செல்ல முயன்றனர். ஆனால் பாதியில் பேருந்து வந்த நிலையில் பயணிகள் அதில் ஏறி டெர்மினலுக்கு சென்றனர்.

இது குறித்து நிறுவனம் கூறியதாவது, "எங்கள் ஊழியர்கள் சிலர் எவ்வளவோ வலியுறுத்தியும் பயணிகள் சிலர் கேட்காமலேயே நடக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அவர்களால் சில மீட்டர்களை கடந்து நடக்க முடியவில்லை. இதனையடுத்து பேருந்து வந்ததும் அதில் ஏறி அவர்கள் பயணித்தனர்" என விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து DGCA விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பயணிகள் தரப்பில் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, "ஸ்பைஸ்ஜெட்டின் ஹைதராபாத்-டெல்லி விமானம் 186 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு 11.24 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனையடுத்து ஒரு பேருந்து வந்து பயணிகளின் ஒரு குழுவை மட்டும் ஏற்றிச் சென்றது. இதனையடுத்து மீதமுள்ள பயணிகளை ஏற்றிச் செல்ல அந்த பேருந்து மீண்டும் வரவில்லை. சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி 1.5 கி.மீ தொலைவில் உள்ள டெர்மினலை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டனர். இவர்கள் சுமார் 11 நிமிடங்கள் நடந்திருப்பார்கள். இதன் பின்னர் மீண்டும் அந்த பேருந்து 12.20 மணியளவில் வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது" என்று கூறியுள்ளனர்.

ஆனால் பயணிகளை நாங்கள் நடக்க வற்புறுத்தவில்லையென ஸ்பைஸ்ஜெட் மறுப்பு தெரிவித்துள்ளது. பேருந்து வருவதற்கு சற்று தாமதமானது உண்மையென்றும், அதன் பின்னர் அனைத்து பயணிகளும் பேருந்தில்தான் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்களை பல்வேறு இடங்களில் தரை இறக்குவது உள்ளிட்ட காரணங்களால் வெறும் 50 சதவிகித விமான சேவையை மட்டுமே நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்று DGCA ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+