"கைவிரித்த மத்திய அரசு.. இந்துக்களின் புனித தலமான கைலாச மலையை கூட காப்பாற்றல.." பாயும் சு வெங்கடேசன்
டெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுப்பதாக சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்துக்களின் புனித பூமியையே பாஜகவால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கைலாய மலையைக் கூட காப்பாற்ற முடியாத நிலையில் தான் பாஜக இருக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என சொல்லி அமளியில் ஈடுபட்டனர். நேற்றைய தினமே ராகுல் காந்தி சீன விவகாரம் குறித்து பேச முயன்றார். இருப்பினும், அவரை பேச அனுமதிக்கவில்லை.

சஸ்பெண்ட்
இன்றைய தினம் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதை தொடர்ந்தே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் மற்றும் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் எம்பி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சு. வெங்கடேசன்
இதற்கிடையே டெல்லியில் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், சீன எல்லை விவகாரம் தொடர்பாகப் பேசிய சு. வெங்கடேசன், இந்துக்களின் புனிதப் பூமியையே பாஜகவால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கைலாய மாலையைக் கூட காப்பாற்ற முடியாத நிலையில் தான் பாஜக இருக்கிறது என்றும் சாடினார். மேலும், குறைந்தபட்சம் அங்கு என்ன நடந்தது என்பதை விவாதிக்கக் கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சு வெங்கடேசன், "இன்றைய தினம் போராட்டத்தில் இந்தியா கூட்டணி உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்தே போராடினார்கள். அதில் எங்கள் 8 எட்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளனர். நாளையும் நிச்சயம் வரிசையாக இடைநீக்கம் நடக்கும். எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதிக்க கூடாது என்று ஆளும் தரப்பு முடிவெடுத்துள்ளது.. மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டதை போல கைலாச மலையில் சீன ராணுவம் மேலேறி வந்தது.
கைலாச மலை
கைலாஷ் என்பது இந்து மரபில் எவ்வளவு முக்கியமான இடம் என்பது அனைவருக்கும் தெரியும் தெரியும். அந்த மலையின் மீது மேலே இன்னொரு நாட்டு ராணுவம் மேலே ஏறி வந்தபோது தடுக்க முடியாமல் இருந்தவர்கள் தான் இவர்கள். ஆன்மீகத்தையே அரசியலாக வைத்திருக்கும் நீங்கள், புனித பூமியாக கருதப்படும் ஒரு கைலாச மலையிலேயே சீன ராணுவம் வந்ததை தடுக்காமல் இருந்துள்ளீர்கள்.
கைவிரித்த மத்திய அரசு
சுமார் 2 மணி நேரம் மௌனம் சாதித்து, அதற்கு பிறகு என்ன முடிவோ நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கைவிரித்துள்ளீர்கள். அது பற்றி ஒரு ராணுவ ஜெனரல் எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை நீங்கள் பரிசீலனை பண்ணுங்கள்.. உண்மையா என்று சொல்லுங்கள். ஆனால், அதை பற்றிய விவாதிக்கும் உரிமை அதில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய உரிமை லோக்சபாவுக்கு இருக்கிறது.
இப்படி நடக்கவே இல்லை என்று கூட நீங்கள் சொல்லுங்க. எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த தான் நாடாளுமன்றம் இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விவாதிக்கவே நாடாளுமன்றம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்து குரல் கொடுத்துள்ளோம்" என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications