நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே திடீர் விலகல்
டெல்லி: நிர்பயா பலாத்கார வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ல் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 6 குற்றவாளிகளில் ஒருவர் மைனர். இவ்வழக்கில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டார். மற்றொரு குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
எஞ்சிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 4 பேரில் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மற்றொரு தூக்கு தண்டனை கைதியான அக்சய் குமார் தரப்பு திடீரென உச்சநீதிமன்றம் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
அவர் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் இந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது இன்று பகல் 2 மணிக்கு விசாரணை தொடங்கியது.
அப்போது நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அறிவித்தார். மேலும் வேறு ஒரு பெஞ்ச் இந்த சீராய்வு மனுவை நாளை காலை 10.30 மணிக்கு விசாரிக்கும் எனவும் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
புதிய பெஞ்ச் அமைப்பு
இதனிடையே அக்சய்குமார் சீராய்வு மனுவை விசாரிக்க நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷ்ணன், போபண்ணா பெஞ்ச் நாளை விசாரிக்க உள்ளது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications