நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே திடீர் விலகல்
டெல்லி: நிர்பயா பலாத்கார வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ல் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 6 குற்றவாளிகளில் ஒருவர் மைனர். இவ்வழக்கில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டார். மற்றொரு குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
எஞ்சிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 4 பேரில் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மற்றொரு தூக்கு தண்டனை கைதியான அக்சய் குமார் தரப்பு திடீரென உச்சநீதிமன்றம் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
அவர் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் இந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது இன்று பகல் 2 மணிக்கு விசாரணை தொடங்கியது.
அப்போது நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அறிவித்தார். மேலும் வேறு ஒரு பெஞ்ச் இந்த சீராய்வு மனுவை நாளை காலை 10.30 மணிக்கு விசாரிக்கும் எனவும் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
புதிய பெஞ்ச் அமைப்பு
இதனிடையே அக்சய்குமார் சீராய்வு மனுவை விசாரிக்க நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷ்ணன், போபண்ணா பெஞ்ச் நாளை விசாரிக்க உள்ளது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications