நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே திடீர் விலகல்
டெல்லி: நிர்பயா பலாத்கார வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ல் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 6 குற்றவாளிகளில் ஒருவர் மைனர். இவ்வழக்கில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டார். மற்றொரு குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
எஞ்சிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 4 பேரில் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மற்றொரு தூக்கு தண்டனை கைதியான அக்சய் குமார் தரப்பு திடீரென உச்சநீதிமன்றம் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
அவர் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் இந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது இன்று பகல் 2 மணிக்கு விசாரணை தொடங்கியது.
அப்போது நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அறிவித்தார். மேலும் வேறு ஒரு பெஞ்ச் இந்த சீராய்வு மனுவை நாளை காலை 10.30 மணிக்கு விசாரிக்கும் எனவும் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
புதிய பெஞ்ச் அமைப்பு
இதனிடையே அக்சய்குமார் சீராய்வு மனுவை விசாரிக்க நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷ்ணன், போபண்ணா பெஞ்ச் நாளை விசாரிக்க உள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications