ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை.. இறுதிவரை முழக்கம்.. பரபரக்கும் காங். போராட்டம்..!
டெல்லி: ராகுல் காந்தியிடம் 3ஆவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை, காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியிடம் தொடர்ந்து 3ஆவது நாளாக விசாரணை நடத்திவருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும், ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் புறப்படும் போதும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திக்குமுக்காடி வருகின்றனர்.

காங். போராட்டத்தில்...
கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டு வரும் போராட்டங்களில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தூக்கிச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள், மூத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கையில் ஏற்பட்ட காயம் உள்ளிட்ட நிகழ்வுகள் அக்கட்சி தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கை, ஆளும் பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

3ம் நாளாக விசாரணை
2ம் நாளில் ராகுல் காந்தியிடம் சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையின் விசாரணை நடைபெற்றது. காலையில் சுமார் நான்கு மணி நேர விசாரணைக்கு பிறகு, மதியம் 3:30 மணியளவில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 4:30 மணியளவில் விசாரணைக்கு ராகுல் ஆஜரானபோது மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரது சகோதரி பிரியங்காவும் வந்திருந்தார். விசாரணை முடிந்து நேற்றிரவு 11.30 மணியளவில் அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் இருந்து ராகுல் புறப்பட்டார்.

மகளிர் காங். போராட்டம்
இன்று மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை தரப்பில் ராகுல் காந்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி மகளிர் அணி தரப்பில் காங்கிரஸ் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

ஜோதிமணி கைது
இதனிடையே அமலாக்கத்துறை அலுவலகத்தை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதி மணி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது சென்றனர். அவர்கள் பேருந்தில் ஏற்றப்பட்ட நிலையிலும், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
-
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications