விவசாய சட்டங்கள்: உச்சநீதிமன்றத்தின் குழுவை புறக்கணிக்க 40 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு!
டெல்லி: விவசாய சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைக்க உத்தேசித்துள்ள வல்லுநர் குழு முன் ஆஜராவது இல்லை என டெல்லியில் போராடும் 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பல மாநிலங்களின் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு 48 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு இதுவரை நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இதனிடையே விவசாய சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால் நாங்களே அதை செய்ய நேரிடும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் எச்சரித்தது.
மேலும் விவசாய சட்டங்களை செயல்படுத்தியாக வேண்டும் என மத்திய அரசு தீவிரமாக இருப்பதற்கும் விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான அணுகுமுறைக்கும் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இதனை தொடர்ந்து விவசாய சட்டங்கள் தொடர்பாக வல்லுநர் குழு ஒன்றை அமைக்க உத்தேசித்ததாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விவசாய சட்டங்களை தொடர்ந்து அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கும் போக்கை கண்டிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அமைக்க இருக்கும் வல்லுநர் குழுவை புறக்கணிப்போம் என டெல்லியில் போராட்டம் நடத்தும் 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விவசாய சங்கங்கள் கூட்டமைப்பான சம்யுக் கிஷான் மோர்ச்சாவின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications