மீண்டும் போர்க்களமானடெல்லி: ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்- எல்லைகளில் போலீஸ் படை குவிப்பு
டெல்லி: மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இப்போராட்டத்தில் பங்கேற்க வரும் விவசாயிகள் டெல்லி எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
Recommended Video
மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயம் தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த விவசாய சட்டங்கள் தங்கள் நலனுக்கு எதிரானது; கார்ப்பரேட்டுகள் வசம் விவசாயத்தை ஒப்படைக்க வகை செய்யும் என எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்தப் போராட்டம் டெல்லியில் மையம் கொண்டது.

டெல்லியின் எல்லைகளில் வெயில், பனி, குளிர் என எதனையும் பொருட்படுத்தாது ஓராண்டுகாலம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இதன்பின்னர் மத்திய அரசு இறங்கி வந்தது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் விவசாயிகள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஒருநாள் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்தார். இதனால் டெல்லியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே டெல்லியில் விவசாயிகள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையில் ராகேஷ் திகாயத் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று டெல்லி எல்லைகளில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதேநேரத்தில் போலீஸ் தடைகளை உடைத்துக் கொண்டு ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லைகளில் தடுக்கப்படும் விவசாயிகள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications