Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது - நன்றி சொன்ன மனைவி

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனிக்கு அறிவிக்கப்பட்ட வீர் சக்ரா விருதை குடியரசுத்தலைவரிடம் இருந்து அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீன மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவரிடம் இருந்து வீர் சக்ரா விருதினை பழனியின் மனைவி வானதி பெற்றுக்கொண்டார்.

Recommended Video

    Galwan மோதலில் வீர மரணம் அடைந்த Havildar Palani-க்கு Veer Chakra Award | Oneindia Tamil

    இந்திய, சீன எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவிவந்தது. லடாக் பகுதியில் இந்தியக் கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தொடர்ந்து அங்கு படைகளைக் குவித்து வந்தது. முன்னதாக சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் லடாக் பகுதியில் பறந்ததால் கடும் பதற்றம் நிலவியது.

    Galwan Martyr Havildar Palani Honoured With Vir Chakra

    தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் இந்திய சீன, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் குவிக்கப்பட்ட சீனப் படைகள் சற்று பின்வாங்கின. இதனால் எல்லையில் நிலவி வந்த பதற்றமான சூழல் அடுத்த சில நாள்களில் குறைந்தது.

    இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கல், இரும்புக் கம்பிகள் கொண்டு இரு தரப்பினரும் மிகக் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.

    இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் மூத்த ராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
    இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் மரணமடைந்தார்.இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் வீரர் பழனி மட்டுமே. அதனையடுத்து வீரர் பழனியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    மத்திய, மாநில அரசுகள், தன்னார்வலர்கள் பழனியின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினர். தமிழக அரசு ரூ.20 லட்சம் நிவாரணமும், வீரர் பழனியின் மனைவிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணியும் வழங்கியது.

    இந்நிலையில் வீர மரணம் அடைந்த வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்தது. இன்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பழனியின் மனைவி வானதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து வீர் சக்ரா விருதினைப் பெற்றுக்கொண்டார்.

    எனது கணவரின் வீர தீரச் செயலுக்கும், தியாகத்திற்கும் கிடைத்த மரியாதை. நாட்டிற்காக அவர் செய்த சேவைக்குக் கிடைத்த இவ்விருதை பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். அவரது தியாகத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன. எனவே மத்திய, மாநில அரசுகளுக்கும், எனது கணவர் பணியாற்றிய 81 ஃபீல்ட் ராணுவப் பிரிவின் கமாண்டிங் ஆபீஸர் அஜய் மற்றும் விருது வழங்க வேண்டும் எனக் கடிதம் எழுதிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+