இந்தியாவில் 15,940 பேருக்கு புதியதாக கொரோனா; 20 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா பரவல் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் நேற்று 17,336 புதிய கொரோனா நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 83,284 ஆக இருந்தது. இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 13.029 பேர் குணமடைந்திருந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,63,103 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 86.02 கோடி (86,02,58,139). வாராந்திரத் தொற்று 3.07 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 4.39 சதவீதமாக பதிவாகியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,940 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 12.425 பேர். குணமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.58 சதவீதமாக உள்ளது. பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,27,61,481.
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 91,779 ஆக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.21 சதவீதமாக உள்ளனர்.
இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 196.94 கோடிக்கும் அதிகமான (1,96,94,40,932) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,54,91,739 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 தடுப்பூசி 12-14 வயதிற்குட்பட்டோருக்கான 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 3.61 கோடிக்கும் அதிகமான (3,62,20,781) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயது உடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 193.53 கோடிக்கும் மேற்பட்ட (1,93,53,58,865) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 12.14 கோடிக்கும் மேற்பட்ட (12,14,44,440) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications