ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. 10ஆவது முறையாகத் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா
டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக இந்தியா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது.
ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களாக 5 நாடுகள், தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகள் என மொத்தம் 15 நாடுகள் உள்ளன. 2021-22ஆம் ஆண்டிற்கான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் ஆகஸ்ட் மாத தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது.
முதல் பணி நாளான திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ். திருமூர்த்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாத திட்டம் குறித்து விளக்கவுள்ளார்.
இது குறித்து திருமூர்த்தி கூறுகையில், "கடல் பாதுகாப்பு, அமைதி காத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளோம். இது தொடர்பாக உயர்மட்ட கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் பல முக்கிய கூட்டங்களை நடத்தவும் இந்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு இந்தியா ஏற்பது இது 10ஆவது முறையாகும். ஏற்கனவே, ஜூன் 1950, செப்டம்பர் 1967, டிசம்பர் 1972, அக்டோபர் 1977, பிப்ரவரி 1985, அக்டோபர் 1991, டிசம்பர் 1992, ஆகஸ்ட் 2011 மற்றும் நவம்பர் 2012 காலகட்டத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இந்தியா இருந்துள்ளது.
-
ரயில் டிக்கெட் புக்கிங்.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்! இனி ஒரே நொடியில் எல்லாமே முடியும் -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
இந்திய எல்பிஜி கப்பல்களை அனுமதித்த ஈரான்.. இந்தியாவின் பவர் இதுதாங்க! சைலண்ட் சம்பவம் -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
வந்தது 3 கப்பல்கள்.. 24 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வர ரூட் போடும் இந்தியா! -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு












Click it and Unblock the Notifications