அக்னிபாத் திட்டம்.. இன்று முதல் ராணுவம், கடற்படையில் சேர விண்ணப்பம்!
டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றாலும், அந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இந்திய விமானப்படையில் பணிக்கு சேர்க்கும் நடவடிக்கை கடந்த 24ம் தேதி தொடங்கி வரும் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி இந்திய விமானப்படையில் பணிக்கு சேர இதுவரை இரண்டே முக்கால் லட்சம் பேர் நாடு முழுவதும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வரை உள்ள இளைஞர்களை நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அக்னிபாத் என்ற புதிய திட்டம் கடந்த 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றிய பின், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணியில் நீட்டிக்கப்படுவர். மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல் சம்பளத்துடன் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.
இந்தத் திட்டத்தைக் கண்டித்து உத்தரப் பிரதேசம், பீகார், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சில பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. உத்தரப் பிரதேசம், பீகார், தெலங்கானா மாநிலங்களில் ரயிலுக்கு தீ வைக்கும் நிகழ்வுகளும் ஏற்பட்டன.
இப்படி ஒரு பக்கம் இளைஞர்களின் போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும் கூட, அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவப் பணியில் சேர விண்ணப்பங்களும் குவிந்து வருகின்றன. அதன்படி இந்திய விமானப்படையில் பணிக்கு சேர இதுவரை இரண்டே முக்கால் லட்சம் பேர் நாடு முழுவதிலும் இருந்து விண்ணப்பித்துள்ளனர். விமானப்படையில் பணிக்கு சேர்க்கும் நடவடிக்கை கடந்த 24-ஆம் தேதி தொடங்கி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் நாட்களில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications