இனி சார்ட் போட்ட பறகும் டிக்கெட் புக்கிங் செய்யலாம்! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு
டெல்லி: இந்திய ரயில்களில் இனி சார்ட் போட்ட பிறகும் டிக்கெட் புக்கிங் செய்யலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன ரயில்கள் இயக்கப்பட்டாலும், முக்கிய வழித்தடங்களில் டிக்கெட் கிடைப்பது சவாலாகவே உள்ளது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இருக்கைகளுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது.

இந்திய ரயில்வே, பயணிகள் பயணத்தை உறுதி செய்யும் வகையில், ரயில் புறப்படுவதற்கு முன்பு இரண்டு முறை உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியலை (சார்ட்) வெளியிடுகிறது. முன்னதாக, முதல் சார்ட் 4 மணி நேரத்திற்கு முன்பாக வெளியிடப்பட்டு வந்தது. தற்போது இது மாற்றப்பட்டு, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாகவே வெளியிடப்படுகிறது. இரண்டாவது மற்றும் இறுதி சார்ட், ரயில் கிளம்பும் 30 நிமிடங்களுக்கு முன்பாக வெளியாகும்.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, பயணிகள் இனி இறுதி நேரம் வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இதற்கு முன்னர், முதல் சார்ட் வெளியான பிறகு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது சாத்தியமில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது, ரயில் புறப்படுவதற்கு கடைசி 30 நிமிடங்கள் முன்பு வரை, அதாவது இரண்டாவது சார்ட் வெளியாகும் வரை, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இந்திய ரயில்வே அனுமதித்துள்ளது. இது திடீர் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
முதல் சார்ட் வெளியிடப்பட்ட பிறகு, ஏதேனும் இருக்கைகள் காலியாக இருந்தால், அவை ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் உடனடியாகக் காட்டப்படும். காலியான இருக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பயணிகள் தங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த இருக்கைகளை ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரப்பூர்வ வலைத்தளம், மொபைல் செயலி அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்ட்டர்கள் வழியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த அறிவிப்பு பண்டிகை காலங்களில் எந்த அளவுக்கு கைக் கொடுக்கும் என தெரியவில்லை. பண்டிகை காலங்களில் முன்கூட்டியே டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்படுகிறது. இது சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுவதால் பலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. எனவே இந்த சலுகை மற்ற நாட்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமையும்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications