இதை பண்ணுங்க.. ஆடைகளை உலர்த்த பயன்படும் நவீன தொழில்நுட்பம்.. ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த "டெக்னாலஜி"!
டெல்லி: சமீபநாட்களாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா சில முக்கிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அவர் பகிரும் தகவல்கள் அன்றைய நாள் முழுவதும் பேசுபொருளாகி அதன் மீதான விவாதங்கள் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்திருக்கும்.
அந்த வகையில் தற்போது டிவிட்டரில் ஒரு கேலிசித்திரத்தை பகிர்ந்து "சில நேரங்களில் நவீன தொழில்நுட்பம் நம்மை அடிப்படைக்கு அழைத்துச் செல்வதைப்பற்றி இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனிதன்
ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை மனிதன் உருவாக்கி வருகிறான். மனிதன் நாகரிகமடைய தொடங்கிய காலத்தில் நெருப்புதான் அவனின் முதல் தேவையாகவும் முதல் கண்டுபிடிப்பாகவும் இருந்தது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இது கால ஓட்டத்தை புதிய கண்டுபிடிப்புகளுடன் மனித சமூகத்தை முன்னோக்கி நகர்த்தியது. நாளடைவில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வளரத் தொடங்கின.

ஆனந்த் மகிந்திரா
ஆரம்பத்தில் பெருநிறுவனங்கள் மற்றும் ராணுவத்திற்கு மட்டுமே பயன்பட்டு வந்த இந்த நவீன கண்டுபிடிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடத்திலும் புழக்கத்திற்கு வரத்தொடங்கின. ஆனால் இவ்வாறு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் புதிய தொழில்நுட்பங்கள் மனித சமூகத்தை எந்த விதத்திலும் உயர்த்தவில்லை என்றும் பாரம்பரிய வழிமுறைகளை இது மறக்கடிக்கச் செய்கிறது எனவும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்.

சூரிய சக்தி
இந்த விவாதங்கள் எப்போதும் இருந்து வருகிறது. இதற்கிடையில்தான் ஆனந்த் மகிந்திரா கேலிச்சித்திரத்தை பகிர்ந்துள்ளார் அதில், "சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி உதவியுடன் நவீன தொழில்நுட்பத்தில் துவைக்கப்பட்ட துணி உலர்ந்துகொண்டிருக்கிறது" என ஒரு பெண் கொடியில் காய்ந்துகொண்டிருக்கும் துணியை பார்த்து மற்றொரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இதற்கு "சில நேரங்களில் நவீன தொழில்நுட்பம் நம்மை அடிப்படைக்கு அழைத்துச் செல்வதைப்பற்றி இருக்கும்" என மகிந்திரா கேப்ஷன் எழுதி ட்வீ ட் செய்துள்ளார்.

ட்விட்டர்
இந்த டிவிட்டர் போஸ்ட் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இதற்கு சுமார் 12 ஆயிரம் பேர் லைக்குகளை அள்ளித் தெளித்துள்ளனர். பலரும் ரீட்வீட் செய்துள்ளனர். சிலர் "புதிய தொழில்நுட்பங்களால் நம்முடைய பழைய பாரம்பரியத்தை மறந்துவிடுகிறோம்" என கமென்ட் செய்துள்ளனர். மற்றொருவர் அடிப்படைகளை கொண்டே புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன என கூறியுள்ளார்.
எது எப்படியோ புதிய தொழில்நுட்பங்கள் 2 லட்சம் ஆண்டுகள் பழமையான மனித நாகரிகத்தை முன்னோக்கித்தான் நகர்த்தவே பயன்படவேண்டுமேயொழிய பின்னோக்கி அல்ல.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications