Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் அற்புதத்தை உலகம் பார்க்கிறது : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின உரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின 75 வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார், பாரம்பரியங்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் இந்தியாவின் அதிசயத்தை உலகம் பார்க்கிறது. மிகப்பெரிய மற்றும் மிகவும் துடிப்பானது ஜனநாயக நாடு இந்தியா என்று புகழாரம் சூட்டினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது : பாரம்பரியங்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் இந்தியாவின் அதிசயத்தை உலகம் பார்க்கிறது. மிகப்பெரிய மற்றும் மிகவும் துடிப்பானது ஜனநாயக நாடு இந்தியா

 President Kovind greets citizens on 75th Independence Day

இப்போது நாம் நமது சுதந்திர தினத்தின் 75 ஆண்டு பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, நாம் பயணித்த கணிசமான தூரத்தைப் பற்றி பெருமிதம் கொள்ள எங்களுக்கு காரணங்கள் உள்ளன. தவறான திசையில் விரைவான முன்னேற்றத்தை விட சரியான திசையில் மெதுவான மற்றும் நிலையான படிகள் விரும்பத்தக்கது என்று காந்திஜி நமக்குக் கற்பித்தார்.அதன் படி பயணித் வந்துள்ளோம்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைக் கூறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது! இந்தியா சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டின் தொடக்கமாக இந்த நாள் சிறப்பான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

"சுதந்திர தினம் நமக்கு திருவிழா. தலைமுறை தலைமுறையாய் போராடிய சுதந்திர போராளிகளால் இது சாத்தியமானது; சில சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி நாம் அறிந்திருப்போம் பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் நமக்கு தெரியாதவை. நமக்கு தெரிந்த தெரியாத பல சுதுந்திர போராட்ட வீரர்களால், இன்று நீங்களும் நானும் அவர்களின் வீரம் நிறைந்த செயல்களால் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். அந்த துணிச்சலான தியாகிகளின் புனிதமான நினைவுக்கு மரியாதை செலுத்துகிறேன்

மகாத்மா காந்தியும் மற்ற அனைத்து தேசிய தலைவர்களும் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து தேசத்தை விடுவிப்பதற்கும் அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தெளிவான பாதையை வழங்கினார்கள் . மற்ற பல நாடுகளைப்போலவே , நம் தேசமும் வெளிநாட்டு ஆட்சியின் கீழ் பெரும் அநீதிகளையும் கொடுங்கோன்மையையும் சந்தித்தது.

நாம் இந்தியா உலகின் மற்ற நாடுகளில் இருந்து வேறுபடுவது எதில் என்றால், மகாத்மா காந்தி தலைமையிலான நமது தேசிய இயக்கத்தின் தன்மை உண்மை மற்றும் அகிம்சை கொள்கைகளில் தான்.

தொற்றுநோயின் தீவிரம் குறைந்துவிட்டது. ஆனால் கோவிட் இன்னும் நீங்கவில்லை. இந்த ஆண்டு கொரோனா மீண்டும் வருவதால் ஏற்படும் அழிவுகரமான விளைவுகளிலிருந்து நாம் இன்னும் வெளியே வரவில்லை. கடந்த ஆண்டு, அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்த முயற்சிகளால், தொற்றுநோய்களின் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் நாங்கள் வெற்றி பெற்றோம். நமது விஞ்ஞானிகள் மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர். எனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் பயிற்சியை நாம் தொடங்கியதால் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்" இவ்வாறு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+