2 நிமிடம்தான்.... ரூ16 கோடி விலை உயர்வு... அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி?
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் நிலத்தின் பெயரால் மெகா மோசடி நடந்துள்ளதாக சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சிகள் ஆதாரங்களை வெளியிட்டு குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ராமர் கோவில் நிலம் சந்தை விலையை விட குறைவாகவே வாங்கப்பட்டதாக ராமஜென்மபூமி அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ராமஜென்மபூமி இருக்கும் இடம் அருகே நிலத்தை வாங்கி வருகிறது ஶ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா (Shri Ram Janmabhoomi Teerth Kshetra) அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மிகப் பெரும் மோசடி நடந்துள்ளது என்பது சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் குற்றச்சாட்டு.

சமாஜ்வாதியின் பவன் பாண்டே
சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் பவன் பாண்டே இது தொடர்பாக அயோத்தியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது பவன் பாண்டே கூறியதாவது: ராம ஜென்மபூமி அருகே நிலம் ஒன்று மார்ச் மாதம் 18-ந் தேதியன்று சுல்தான் அன்சாரி, ரவி மோகன் ஆகியோருக்கு ரூ2 கோடிக்கு விலைக்கு விற்கப்பட்டது.

சில நிமிடங்களில் ரூ18.5 கோடிக்கு பத்திரம்
இந்த விற்பனை பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே அதே நிலத்தை ரூ18.5 கோடிக்கு ஶ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வாங்கி இருக்கிறது. சில நிமிடங்களிலேயே ஒரு நிலத்தின் விலை எப்படி ரூ16 கோடிக்கு உயர்ந்திருக்கும்? இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பவன் பாண்டே கூறினார்.

ஆம் ஆத்மி சஞ்சய் சிங்
இதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் சிங் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உலகில் எந்த ஒரு நிலமும் வினாடிக்கு ரூ5.5 லட்சம் விலை உயர்ந்தது கிடையாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டோரை சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கண்டனம்
மேலும் பவன் பாண்டே, சஞ்சய் சிங் இருவருமே இந்த நிலப் பதிவு தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டனர். இதேபோல் ராமர் கோவிலுக்கு நிலம் வாங்குகிறோம் என்ற பெயரில் நடந்துள்ள இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி உள்ளது.

ராமஜென்மபூமி அறக்கட்டளை விளக்கம்
ஆனால் இந்த மோசடி புகார்களை ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையின் சம்ப்ராத் வெளியிட்ட அறிக்கையில், ராமர் கோவிலுக்கான நிலம் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது. ஏற்கனவே நிலத்தின் உரிமையாளர்கள் விற்ற நிலத்துக்கு பதிவுதான் அன்றைய தினம் செய்தனர் என விளக்கம் அளித்திருக்கிறார். இந்த மோசடி புகார் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications