நாளைக்கே சீனாக்காரன் நம்ம கூட சண்டைக்கு வந்தா என்ன பண்ணலாம்.. நிபுணர்கள் முன்வைக்கும் யோசனை!
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வரும் 2020-க்குள் போர் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 1962-ஆம் ஆண்டு சீனா- இந்தியாவுக்கு இடையே போர் நடைபெற்றது. அப்போது சீனா, லடாக் மற்றும் மக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து வந்து தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றியதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த டோக்லாம் பகுதியானது பூடானுக்கு சொந்தமானது. எனினும் அது எல்லை பகுதி என்பதால் இந்தியா பாதுகாத்து வருகிறது. இந்த டோக்லாமை கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்பதால் அதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியுள்ளது.

போர் பதற்றம்
இந்த நேரத்தில் சீன படைகள் திரும்ப செல்லாததால் இந்தியா போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு சீன படைகள் டோக்லாம் பகுதியிலிருந்து வெளியேறியதால் போர் பதற்றம் தணிந்தது.

போர் வாய்ப்புகள்
இந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் 2012-ஆம் ஆண்டு போர் வரும் என தெரிவித்தனர். பின்னர் பீஜிங் ஒலிம்பிற்கு பிறகு போர் வரும் என்றார்கள். ஆனால் தற்போது அந்த நிபுணர்களே வரும் 2020-இல் போர் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்தனர்.

தோல்வி
தற்போது சர்வதேச அளவில் பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளுள் இந்தியாவும், சீனாவும் முக்கியமானதாகும். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் வந்தாலும் அவை கடந்த 5-ஆம் நூற்றாண்டுகளில் ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா இடையே வந்த போரை போல் வெற்றி தோல்வி இன்றி முடியும்.

வடகிழக்கு
அவ்வாறு போர் வந்தால் ஏராளமான பொருட்சேதத்தை கொடுக்கும், ஏராளமானோர் காயமடையும் சூழலும் ஏற்படும் என இந்திய வல்லுனர்கள் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட எல்லை பிரச்சினை எழலாம். இந்தியாவின் எல்லை வடமேற்கில் அதன் வடகிழக்கு வரை ஒரு வளைவாக செல்கிறது.

தீர்த்துக் கொள்ள வேண்டும்
இதனால் எல்லை எங்குள்ளது என தெரியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்னர் மக்மோகன் எல்லைக்கோடு உருவாக்கப்பட்ட போதிலும் எல்லை என்பது தெளிவாகவில்லை. இது போன்ற பிரச்சினைகளை போர் மூலம் தீர்த்து கொள்ளாமல் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வதே சரியானதாகும் என்கின்றனர் நிபுணர்கள்.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications