திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! திணறிப் போன மக்கள்! உலகம் முழுவதும் இதே நிலைமையா? என்னாச்சு தெரியுமா?
டெல்லி : இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியதால் பயனர்கள் மெசேஜ் அனுப்ப முடியாமலும், முக்கிய தகவல்களை பகிர முடியாமலும் அவதி அடைந்துள்ளனர். முடக்கத்திற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போல தற்போது உலகம் முழுவதும் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
தகவல் பரிமாற்றத்தோடு நின்றுவிடாமல் தற்போது வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகளையும் வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு வழங்குகிறது.

வாட்ஸ் ஆப்
ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வீடியோக்கள் புகைப்படங்கள் முக்கியமான தகவல்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பாதுகாப்பு அம்சங்களில் மிகவும் கவனமாக செயல்பட்டு வரும் நிலையில் அடிக்கடி அப்டேட்டுகளும் விடப்பட்டு வருவதால் வாட்ஸ் அப் பாதுகாப்பானதாக இருக்கிறது. ஆனால் அதிலும் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன.

ஹேக்கர்கள் கைவரிசை
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சித்ததாக வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பயனாளர்களுக்கு சில அறிவுரைகளும் வழங்கப்பட்டது. திடீரென ஹேக்கர்கள் அனுப்பிய லிங்குகளை ஓபன் செய்த வாடிக்கையாளர்கள் அவர்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டதை உணர்ந்தனர். வாடிக்கையாளர்கள் பலரும் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு புகார்களை தெரிவித்தனர்.

சேவை முடக்கம்
இதையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் கூறியது. இந்நிலையில் தற்போது உலகின் பல இடங்களில் வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் சில நகரங்களில் இந்த சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் முக்கிய தகவல்கள் படங்கள் வீடியோக்களை லோட் செய்ய முடியவில்லை ஏற்கனவே வந்திருக்கும் தகவல்களையும் ஓபன் செய்து படிக்க முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

என்ன காரணம்?
அதே நேரத்தில் முடக்கத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை அதே நேரத்தில் முடக்கத்தை சரி செய்யும் பணியில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் மென்பொருள் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமா அல்லது ஹேக்கரின் வேலையா எனவும் ஆராயப்பட்டு வருகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications