ஈரோட்டில் கனநொடியில் கண்ணாடி விரியன் செய்த வேலை.. தறிபட்டறையில் நடந்ததை பாருங்க
ஈரோடு: தமிழ்நாட்டில் நிலப்பகுதிகளில் வாழும் நான்கு விஷம்பாம்புகளான நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய நான்கு பாம்புகளே மோசமானவை.. இதில் ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொருவிதமாக மனிதனை பாதிக்கிறது. இதில் கண்ணாடி விரியன் பாம்பு நேரடியாக ரத்த ஓட்ட மண்டலத்தை தாக்குகிறது. இந்த பாம்பு ஆபத்தான பாம்புகளில் ஒன்றாக இருக்கிறது. ஈரோட்டில் கைகாட்டி வலசு பகுதியில் கோபால் என்பவருக்குச் சொந்தமான விசைத்தறி கூடத்தில் கண்ணாடி விரியன் புகுந்தது. அதனை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு அடுத்த கைகாட்டி வலசு பகுதியில் கோபால் என்பவருக்குச் சொந்தமான விசைத்தறி கூடம் இயங்கி வருகிறது. இங்கு வழக்கம் போல் ஆறு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பட்டறைக்குள் பாம்பு ஒன்று புகுந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

விரைந்து வந்த பாம்பு பிடி வீரர்
இது குறித்து உடனடியாகப் பாம்பு பிடி வீரருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர், விசைத்தறி கூடத்தில் இருந்த அலமாரியின் அருகே பதுங்கியிருந்த பாம்பை மிகவும் லாவகமாகப் பிடித்தார். சோதனையில், அது அதிக விஷம் கொண்ட கண்ணாடி விரியன் என்பது தெரியவந்தது.
சீற்றத்துடன் இருந்த பாம்பு
பிடிபட்ட நேரத்தில் அந்தப் பாம்பு மிகுந்த சீற்றத்துடன் இருந்ததை அறிந்து, அதன் சீற்றத்தைக் குறைக்க அதன் மீது தண்ணீரை ஊற்றிய பாம்பு பிடி வீரர், பின்னர் அதனைப் பத்திரமாகச் சாக்குப் பையில் அடைத்தார். மீட்கப்பட்ட அந்தப் பாம்பு வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. கொடிய விஷம் கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு விசைத்தறி கூடத்தில் புகுந்த செய்தி தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் பத்திரமாக பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதில் நிம்மதி அடைந்தனர்.
கிட்னி பெயிலியர்
நச்சினால் சிதைக்கப்பட்ட இரத்த அணுக்கள் மற்றும் தசையின் கழிவுகள் சிறுநீரகத்தில் தங்கி, அதைச் செயலிழக்கச் செய்கின்றன. இதுவே மரணத்திற்கு மிக முக்கியமான காரணமாகிவிடுகிறது. நச்சு ஏறியவுடன் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து சில நிமிடங்களிலேயே உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. தொடர் இரத்தப்போக்கினால் உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் செல்லாமல் 'மல்டி ஆர்கன் ஃபெயிலியர்' ஏற்படுகிறது.
மருத்துவர்கள் தகவல்
கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால், கடிபட்ட 1 முதல் 2 மணி நேரத்திற்குள் Antivenom செலுத்தப்படாவிட்டால், சிறுநீரகம் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. கண்ணாடி விரியன் கடித்த இடத்தில் கடுமையான வலியும், வீக்கமும் இருக்கும். இது மற்ற பாம்புகளை விட அதிக நச்சைச் செலுத்தும் திறன் கொண்டது என்பதால் முதலுதவியை விட மருத்துவமனை சிகிச்சை முக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியாவில் கண்ணாடி விரியன் பாம்பு கடியால் தான் அதிகம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே கவனமாக இருப்பது நல்லது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications