பாஜக முக்கிய தலைவர் ஹைதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை! என்ன காரணம்! தீவிரம் காட்டும் போலீசார்
ஹைதராபாத்: தெலங்கானாவில் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானாவில் இப்போது சந்திரசேகர ராவ் தலைமையிலான டிஆர்எஸ் ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் இங்கு ஆட்சியைப் பிடிக்கப் போராடி வருகிறது.
அடுத்தாண்டு இறுதியில் இங்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்குத் தயாராகும் பணிகளை இங்கு அனைத்து கட்சிகளும் சத்தமின்றி மேற்கொண்டு வருகிறது.

தற்கொலை
இந்தச் சூழலில் ஐதராபாத்தில் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநில பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரும் அக்கட்சியின் முக்கிய மாநில தலைவர்களில் ஒருவருமான ஞானேந்திர பிரசாத் நேற்று தற்கொலை செய்து கொண்டதாகத் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது அம்மாநில பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார்
ஹைதராபாத்தில் மியாபூர் பகுதியில் வந்த ஞானேந்திர பிரசாத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். தனது இல்லத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவர் தூக்கிட்டுள்ளார். இது தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன காரணம்
அவருக்குச் சமீபத்தில் தான் விபத்தில் கால் எழும்பு உடைந்து இருந்தது. இதனால் பொது நிகழ்ச்சிகளிலும் சரி கட்சி நிகழ்ச்சிகளிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. தொடர்ந்து வீட்டிலேயே முடங்கி இருந்ததால், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. களைப்பாக உள்ளதால் தன்னை சொந்தரவு செய்ய வேண்டாம் என்று தனது உதவியாளரிடம் கூறிவிட்டு, அவர் அறைக்குச் சென்றுள்ளார். இதனால் உதவியாளர் வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

என்ன நடந்தது
காலை நீண்ட நேரம் ஆனதால், உணவு கொடுக்க அறையைத் தட்டி உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்காததால் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டறியப்பட்டது. ஞானேந்திர பிரசாத் குடும்பத்தினருக்கும் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அவருக்கு எந்தவொரு கடனும் இல்லை என்றும் அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை என்றும் ஞானேந்திர பிரசாத் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications