ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே.. அய்யோ.. அம்மா என கதறி துடித்த இளம்பெண்! உலுக்கும் வீடியோ!
ஹைதராபாத்: ஆந்திராவில் ரயிலில் இருந்து இறங்கும் போது கால் இடறி தவறி விழுந்த இளம்பெண் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்குள்ளும் இடையே சிக்கிக் கொண்டார். வெளியே வர முடியாமல் அந்த மாணவி கதறி அழுதது அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது.
பயணங்கள் எந்த அளவுக்கு ரசிக்கக்கூடியதாக இருக்கிறதோ.. அதே அளவுக்கு நாம் கவனமாக இல்லாவிட்டால் ஆபத்தும் நிறைந்துள்ளது.
இதற்கு ரயில், கார் என எந்த வகையிலான பயணமும் விதி விலக்கல்ல. சற்று பொறுமை இழந்து செயல்பட்டாலோ... அஜாக்கிரதையாக இருந்தாலோ.. வாழ்நாள் எல்லாம் கஷ்டப்படும் அளவுக்கு நிலமை ஏற்பட்டு விடும்.

ரயில் விபத்து
ஆனால், இத்தகைய ஆபத்துக்களை உணராமல் சில பள்ளி, கல்லூரி மாணவர்களும் நாள்தோறும் ரயில், பேருந்துகளிலும் சாகசங்கள் என்ற பெயரில் ஆபத்துக்களை உணராமல் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். பயணத்தின் போது சிறிய விபத்துக்கள் கூட பெரும் துயரத்தை கொடுத்து விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் ஒரு ஆந்திராவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

கால் தவறி விழுந்த மாணவி
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள அன்னவரம் என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சசிகலா. இவர் துவ்வாடாவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ படித்துவருகிறார். கல்லூரிக்கு தினமும் தனது ஊரில் இருந்து குண்டூர்- ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் கல்லூரிக்கு சென்று வருகிறார். அந்த வகையில் நேற்றும் வழக்கம் கல்லூரிக்கு ரயிலில் புறப்பட்டு சென்றார். துவ்வாடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் சசிகலா ரயிலில் இருந்து இறங்கினார். அப்போது கால் இடறி ரயிலுக்கும் பிளாட்பாரத்தும் இடையில் சிக்கிக் கொண்டார்.

வலியால் கதறி அழுத மாணவி
இதை கவனித்த சக பயணிகள் அலறி கூச்சல் போட்டதால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும், ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்குள்ளும் சிக்கிக் கொண்ட அவரால் வெளியே வர முடியவில்லை. அங்கிருந்த பயணிகள் கை கொடுத்து முயற்சி செய்தும் அவரால் வெளியே வர முடியவில்லை. தகவல் அறிந்த ரயில்வே போலீசாரும் அங்கு வந்தனர். அவர்களும் வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், துளியும் பலன் இல்லை. இதற்கிடையே மாணவி வலியால் கதறி அழுதார்.

2 மணி நேர போராட்டத்துக்கு பின்
நீண்ட நேரம் போராடியும் மாணவியை மீட்க முடியவில்லை. இதையடுத்து பிளாட்பாரத்தில் உள்ள காங்கிரீட்டை இடித்து மாணவி சசிகலாவை பத்திரமாக மீட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவி மீட்கப்பட்டது அங்கு இருந்த பயணிகளுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது. மீட்கப்பட்ட மாணவி சசிகலா உடனடியாக விசாகப்பட்டினத்தில் உள்ள கிம்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம், தாமதமாக குண்டூர் -ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications