பிளஸ் 2 மாணவியை வீட்டுக்குக் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்
சன்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது பள்ளி மாணவியை 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதாலா நகரில் உள்ள காந்தி முகாம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த மாதம் 16ம் தேதி பள்ளிக்கு வெளியே பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை சந்தித்துள்ளார். சிறிது நேரம் பேசிய அவர் மாணவியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் சிறுவன் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து சிறுமி அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் வைத்து சிறுவன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் சிறுமி நேற்று முன்தினம் தான் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சிறுவன் மீது போலீசில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாய்க்கு தெரியும் என்றும், அறைக்குள் தாங்கள் சென்றபோது அவர் தான் வெளியே பூட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை நேற்று கைது செய்தனர். ஆனால் அவரின் தாய் தலைமறைவாகிவிட்டார்.
17 வயது சிறுமியை மைனர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications