கந்தகார் விமான கடத்தல் வழக்கு: தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட யூசுப் விடுதலை

கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி காத்மாண்ட் நகரிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், ஐ.சி.- 814 லக்னோ மீது பறந்து கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. பின்னர் கந்தகாருக்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் அங்கு ஐந்து நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.
சிறை பிடிக்கப்பட்ட விமானத்தை விட வேண்டும் என்றால், ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். திவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு தீவிரவாதிகளை விடுவித்தது. இதையடுத்து, விமானத்தை தீவிரவாதிகள் விடுவித்தனர்.
இந்நிலையில், விமானத்தை கடத்திய தீவிரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்தது, போலி பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தது, டிக்கெட் எடுத்துக் கொடுத்தது, ஆயுதங்கள், வெடிபொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அப்துல் லத்தீப் ஆதம் மொமீன், யூசுப் நேபாளி, தலிப் பூஜைல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்னர். அவர்களுக்கு பாட்டியாலா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. எனினும், சி.பி.ஐ அவர்களுக்கு மரண தண்டனையை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியது.
ஆனால், கடந்த 1999ம் ஆண்டு முதல் சிறைக்காவலில் உள்ள மொமீன், யூசுப், பூஜைல் ஆகிய மூவர் மீதும் சி.பி.ஐ. போதுமான ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து, யூசுப் நேபாளியை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளதாக பாட்டியாலா உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளியன்று மாலை 6.30 மணி அளவில் பாட்டியாலா மத்திய சிறையில் யூசுப் நேபாளி விடுதலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த யூசுப், ‘நான் விமான கடத்தலில் ஈடுபடவில்லை. ஆனாலும், 14 வருடங்களை சிறையில் கழித்துள்ளேன். அந்த காலகட்டத்தில் என்னுடைய பெற்றோர்கள் இறந்துவிட்டனர். என் மனைவி என்னை விட்டு விலகி சென்றுவிட்டார். நான் சிறையில் கழித்த வருடங்களை யார் திருப்பித் தர போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை'' என கண்ணீருடன் தெரிவித்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications