ஆந்திர அமைச்சரவையில் இருந்த இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா
ஆந்திர அமைச்சரவையிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
அமராவதி: ஆந்திர அமைச்சரவையிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கொடுத்தனர்.
கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும் பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றது. இந்நிலையில் ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.
எனினும் மத்திய அரசு பிடிகொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த நாயுடுவை சமாதானப்படுத்தும் முயற்சியில்தான் மத்திய அரசு ஈடுபட்டது.

ஆந்திரா எம்பிக்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்குதேசம் கட்சியின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மத்திய அரசு மறுத்து விட்டது.

சந்திரபாபு முடிவு
இதையடுத்து பாஜகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று முதல்வர் முடிவு செய்தார். அதன்படி நேற்று இதற்கான அறிவிப்பை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

மத்திய தெலுங்குதேச அமைச்சர்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜு மற்றும் ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் இன்று ராஜினாமா செய்கின்றனர். அதுபோல் ஆந்திர அமைச்சரவையிலும் பாஜக அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இரு அமைச்சர்கள்
தேஜகூ - தெலுங்கு தேசம் கூட்டணி முடிவுக்கு வந்ததை அடுத்து ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள் காமினேனி சீனிவாசன், மாணிக்யாலராவ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதத்தை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கொடுத்தனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications