பீகார் சட்டசபைக்கு அக்டோபர்- நவம்பரில் 4 கட்டமாக தேர்தல்?
டெல்லி: பீகார் மாநில சட்டசபைக்கு அக்டோபர் மாதம் 4 கட்டமாக தேர்தல் நடைபெறக் கூடும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை தலா 100 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளும் தேசியவாத காங்கிரஸுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியோ இம்முறை பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறது.
இதனிடையே பீகாரில் 4 கட்டமாக தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தளத்துக்கு தகவல் தெரிவித்த தேர்தல் ஆணைய வட்டாரங்கள், அக்டோபர் மாதத்தில் பீகாரில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கும்; அனேகமாக 4 கட்டங்களாக நவம்பர் வரை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன. இது தொடர்பான தீவிர ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்காக கூடுதல் பாதுகாப்புப் படையினரை நிறுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூடுதல் எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகள் அமைத்து எளிதாக வாக்களிக்க வகை செய்வது; முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க இணையதளத்தில் வாக்களிப்பதை நேரடியாக ஒளிபரப்புவது ஆகிய நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications