ஈராக்கில் சிக்கிய மேலும் 58 செவிலிகள் மீட்பு
டெல்லி: ஈராக்கின் கலவரப் பகுதிகளில் இருந்து மேலும் 58 இந்திய செவிலியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், அங்கு சன்னி பிரிவினரிடம் மாட்டி தவித்து வரும் 39 கட்டுமானத் தொழிலாளர்களையும் மீட்பதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி ஒருவர் வெளியிட்டுள்ள செய்தியில் 58 செவிலியர்களையும் மிகவும் ஆபத்துகள் நிறைந்த பகுதிகளில் இருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஈராக்கில் உள்ள இந்திய அரசின் நண்பர்களாய் விளங்கியவர்களின் மூலமாகதான் அவர்களை மீட்டதாகவும், அவர்களுடைய பாதுகாப்பு கருதி மேற்கொண்டு எந்த தகவலையும் வெளியிட இயலாது என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
இதற்கு முன்பாக 46 செவிலியர்களை திக்ரித்தில் இருந்து மீட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 150 இந்தியர்கள் தற்போது ஈராக்கின் போர் நடைபெறும் பகுதிகளில் மாட்டி தவித்து வருகின்றனர். மற்ற இடங்களில் 39 இந்தியர்கள் உள்ளனர் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
"இதற்கு மேல் எந்த விவரங்களையும் வெளியிட இயலாது. அதனால், இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் வேலைக்கு இடையூறு ஏற்படலாம்" என்றும் தெரிவித்துள்ளார்.
சன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கு இடையேயான உள்நாட்டுக் கலவரம் துவங்கியபோது கிட்டதட்ட 10,000 இந்தியர்கள் ஈராக்கில் மாட்டி தவித்து வந்தனர்.
தற்போதைய கணக்கின்படி கலவரம் அற்ற பகுதிகளில் 6,500 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications