அட கொடுமையே.. சாமி கும்பிட சென்ற பக்தருக்கு இப்படியா நடக்கனும்..எப்படி வந்து மாட்டிருக்காரு பாருங்க!
அகமதாபாத்: கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர் ஒருவர் தனது அதீத பக்தியால் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவில் வளாகத்தில் உள்ள சாமி சிலைகள் முன்பு பக்தர்கள் தரையில் விழுந்து வணங்குவதுண்டு.
அதேபோலத்தான் கோவில் வளாகத்தில் உள்ள யானை சிலை முன்பாக விழுந்து வணங்கியிருக்கலாம் என கருதப்படும் ஒரு நபர் ஆர்வக்கோளாறில் யானை சிலைக்கு அடியில் புகுந்து வெளியே வர முடியாமல் படாத படுகிறார்.

பரிதவிக்கும் காட்சிகள்
இது தொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் உலா வருகிறது. நிதின் என்ற நெட்டிசன் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். சில வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், கோவிலில் உள்ள யானை சிலைக்கு அடியில் பாதியளவு புகுந்தபடி வெளியில் வர முடியாமல் ஒருவர் தவித்துக்கொண்டு இருக்கிறார். முன்னேயும் செல்ல முடியாமல் பின்னேயும் வர முடியாமல் அவர் பரிதவிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பிடித்துள்ளன.

அருகில் உள்ளவர்களும் உதவி
கோவிலில் இருந்த பூசாரி உள்பட மேலும் சிலரும் அவருக்கு உதவ முயற்சிக்கின்றனர். ஆனால் இதற்கு எந்த பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. யானை சிலை முன்பு வெளியில் வருவதற்காக சில ஆலோசனைகளையும் அங்கு நிற்கும் பக்தர்கள் சிலர் கூறும் சத்தங்களும் வீடியோவில் கேட்கின்றன. அங்கு நின்று இருந்த நபர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்ததாக தெரிகிறது. ஆனால், இந்த நபர் இறுதியில் வெளியில் வந்தாரா.. என்பது தெரியவில்லை.

அதீத பக்தி உடல் நலத்திற்கு கேடு
இந்த சம்பவம் நடைபெற்ற இடமும் தெரியவில்லை. இந்த பதிவை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் நிதின் என்ற நெட்டிசன் அதீத பக்தி உடல் நலத்திற்கு கேடு என்ற கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இந்த சிலைக்குள் எப்படி இந்த நபர் போய் சிக்கிக் கொண்டார் என்ற குழப்பத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், இவ்வளவு சிறிய சிலையின் அடிப்பாகத்திற்குள் எப்படி இந்த நபர் நுழைந்தார்.

இப்படி ரிஸ்க் எடுக்க மாட்டேன்
"உண்மையிலேயே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "அவர் பத்திரமாம மீட்கப்பட்டு இருப்பார் என்று நம்புவோம். நான் ஒருபோதும் இப்படி ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டேன்" என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் சில நெட்டிசன்களோ.. கடைசி வரை இந்த நபரால் வெளியே வர முடியாவிட்டால் எந்த ஆப்ஷனை கையில் எடுப்பார்கள் என்று சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர். இதுபோல நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் இந்த வீடியோவை நிதின் என்ற நெட்டிசன் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து பரவி வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications