பிறந்தநாள் கொண்டாட சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... மும்பை தீ விபத்தில் மரணம்!
மும்பையில் இருக்கும் கமலா மில்ஸ் வளாகத்தில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

மும்பை: மும்பையில் இருக்கும் கமலா மில்ஸ் வளாகத்தில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அந்த வளாகத்திற்கு பிறந்த நாள் கொண்டாட சென்ற பெண்ணும் இந்த தீ விபத்தில் மரணம் அடைந்து இருக்கிறார்.
3 மணி நேரமாக கஷ்டப்பட்டு தீ அணைப்பு வீரர்கள் இந்த தீயை கட்டுப்படுத்தினார்கள். இதுவரை இந்த தீ விபத்து காரணமாக 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மேலும் இதில் பலர் காயம் அடைந்து இருக்கின்றனர். காயம் அடைந்த அனைவரும் மும்பையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

மோசமான தீ
மும்பையில் இருக்கும் கமலா மில்ஸ் பெரிய வளாகம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ கட்டுப்படுத்த முடியாமல் பரவி இருக்கிறது. அங்கு இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.

மொட்டை மாடி வரை பரவியது
முதலில் ஆறாவது மாடி வரை பரவிய இந்த தீ பின் மொட்டை மாடி வரை சென்று இருக்கிறது. அங்கு 12.30 மணிக்கு தீ ஏற்பட்ட போது மொத்தம் 150 பேர் இருந்துள்ளனர். மேலும் இந்த தீயை கட்டுப்படுத்த தீ அணைப்பு படையினர் அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த தீ மிகவும் மோசமான 'ஏ1' ரக தீ என்று கூறப்பட்டு இருக்கிறது.

பிறந்த நாள் கொண்டாட்டம்
அந்த மாடியில் மும்பையை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் அவரது நண்பர்களும் இருந்துள்ளனர். சரியாக 12 மணிக்கு அவர்கள் கேக் வெட்டி அந்த பெண்ணின் 28வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது அங்கு சரியாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் அந்த பெண்ணும் அவரது நண்பர்கள் சிலரும் மரணம் அடைந்துள்ளனர்.

அடையாளம்
அந்த பெண்ணின் உடலை அவளது காதலன் அடையாளம் காட்டி இருக்கிறார். இந்த விபத்து குறித்து பேசிய அவர் ''இந்த விபத்து எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. திடீர் என்று எல்லோரும் ஓடினார்கள். நாங்கள் சுதாரிப்பதற்குள் தீ மொத்தமாக பரவிவிட்டது. எதுவுமே எங்களுக்கு புரியவில்லை'' என்று அவர் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications