ஆதார் அட்டை வழக்கு.. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஆதார் அட்டை தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஆதார் அட்டை தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. இது தனி நபர்களை பற்றி தகவல்களை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்றும், இது தனிமனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதிய உணவு திட்டம், அரசின் உதவித்தொகைகள் பெறும் திட்டம் என பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என்ற உடன், குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாந்தா சின்கா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அரசியல் சாசன அமர்வு
இது தொடர்பான வழக்கில் கடந்த 7-ந் தேதி நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதார் எண் தொடர்பான அனைத்து மனுக்களையும் அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அமர்வுக்கு மாற்றம்
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆதார் அட்டை தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவு
இந்த அரசியல் சாசன அமர்வு இன்று ஆதார் தொடர்பான விசாரணையை தொடங்கியது. அப்போது, ஆதார் தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் மத்திய அரசு கோரியது. அதனைத் தொடர்ந்து, 9 பேர் கொண்ட அமர்வுக்கு ஆதார் அட்டை வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாளை விசாரணை
ஒன்பது பேர் கொண்ட அமர்வு நாளை ஆதார் அட்டை தொடர்பான வழக்கை விசாரிக்க உள்ளது. அப்போது ஆதார் அட்டை தொடர்பாக பல முக்கிய உத்தரவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications