நிறுவனங்களுக்கு ஆதார் போல அடையாள அட்டையாம்.. காரணம் இதுதான் என்கிறார் அருண் ஜெட்லி
நிறுவனங்களுக்கு அடையாள அட்டை வழங்குவதன் மூலம் போலிகளை ஒழிக்க முடியும் என்று அருண் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அடையாள அட்டை வழங்குவதன் மூலம் போலி நிறுவனங்களை ஒழிக்கவும், பணப்பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் விவசாயம், கிராமப்புற சுகாதாரம் போன்றவற்றிற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம் தொழில் நிறுவனங்களும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் மிக முக்கியமாக நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார். அதில் அவர், "ஒவ்வொரு நிறுவனத்துக்கும், அது பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி, ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. எனவே நாட்டில் உள்ள நிறுவனங்கள் அனைத்துக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வரும்" என்று கூறினார்.
இதன் மூலம் பெயரளவில் இயங்கி வரும் போலி நிறுவனங்களை அழிக்கவும், முறையற்ற பணப்பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆதார் கார்டு மூலம் தனி மனிதர்களின் தரவுகளை முறைப்படுத்துவது போல, இந்த நிறுவனங்களுக்கான தனி அடையாள அட்டை மூலம் நிறுவனங்களையும் முறைப்படுத்த முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
ஏற்கனவே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உத்யோக் ஆதார் என்கிற திட்டம் 2015ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் இதுவரை 4.1 மில்லியன் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், பணப்பரிமாற்றத்தின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவில் தொழில் வளர்ச்சி முறைப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications