சபரிமலையில் ஆராட்டுத்திருவிழா கோலாகலம்.. நாளை சங்குத்தியில் பள்ளிவேட்டை!
சபரிமலையில் ஆராட்டுத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை: சபரிமலையில் நடைபெற்று வரும் ஆராட்டு திருவிழாவில் நாளை சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறுகிறது. நாளை மறுநாள் பம்பையில் ஆராட்டு நடைபெறுகிறது.
சபரிமலையில் புதிய தங்க கொடிமர கும்பாபிஷேகம் கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் ஆராட்டு திருவிழா 28-ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஸ்ரீபூதபலியும், ஐந்தாம் திருவிழா முதல் யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் விழா முதல் தினமும் மதியம் 12 மணிக்கு உற்சவபலி நடைபெற்று வருகிறது.
ஒன்பதாம் நாள் விழாவான நாளை இரவு ஒன்பது மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். நள்ளிரவில் பள்ளி வேட்டை முடிந்த பின்னர் சன்னிதானம் திரும்பும் சுவாமி, கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளி உறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
7ஆம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் சுவாமியை ஸ்ரீகோயிலுக்குள் ஆவாகிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் நெய்பிஷேகம் நடைபெறும். காலை ஏழு மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் யானை மீது சுவாமி ஏற்றப்பட்டு, ஆராட்டு பவனி பம்பைக்கு புறப்படுகிறது.
பகல் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு விழா நடைபெறுகிறது. மாலை மூன்று மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்துக்கு புறப்படும். இரவு 10 மணிக்கு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி விழா நிறைவு பெறும். அத்துடன் நடை அடைக்கப்படும்.
அதன் பின்னர் ஆடி மாத பூஜைகளுக்காக 16-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது. 17-ம் தேதி காலை முதல் நெய்யபிஷேகம் நடைபெறும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications