நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனா கடத்தப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தப்பட்டது தொடர்பாக 7 பேர் மீது போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பிரபல நடிகை பாவனா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காரில் வந்த போது கடத்தப்பட்டார். இது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில்குமார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 7 பேர் மீது ஆலுவா டிஎஸ்பி பாபு குமார் தலைமையிலான போலீஸார் அங்கமாலி நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதில் பல்சர் சுனில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
பாவனா காரில் செல்வது குறித்து பல்சர் சுனிலுக்கு தகவல் கொடுத்த டிரைவர் மார்ட்டின் ஆன்டனி, கூலிப்படையை சேர்ந்த சலீம், பிரதீப், விஜீஸ், மணிகண்டன், கோவையில் தலைமறைவாக இருக்க உதவிய சார்லி தாமஸ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான சதி திட்டம் குறித்து விசாரிக்க போலீஸார் திட்டமி்ட்டுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று டிஎஸ்பி பாபு குமார் தெரிவித்துள்ளார். குற்றப்பத்திரிகை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யாவிட்டால் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதால் விரைவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications