சோனியாவின் இஃப்தார் விருந்தை புறக்கணிக்கும் லாலு… அதே நாளில் அவர் தருகிறார்
பாட்னா: காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியாகாந்தி அளிக்கும் இஃப்தார் விருந்தை ராஷ்டிரியா ஜனதா கட்சித்தலைவர் லாலு பிரசாத் யாதவ் புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதிஷ் குமாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள லாலு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆண்டுதோறும் தனது கட்சி நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி நிர்வாகிகளுக்கும் இஃப்தார் விருந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆண்டும் வரும் 13ம் தேதி அன்று இஃப்தார் விருந்து கொடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார்.

சோனியா அழைப்பு
டெல்லியில் உள்ள பிரபல ஒரு நட்சத்திர ஹோட்டலில், இந்த இஃப்தார் விருந்து கொடுக்க உள்ளார். இந்த விருந்தில், பாஜக தவிர, அனத்து கட்சித் தலைவர்களுக்கும் சோனியா காந்தி அழைப்புவிடுத்துள்ளார். இதற்காக அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தன் கைப்பட கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

ஒருங்கிணையும் கட்சிகள்
சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று, சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ்குமாருக்கு முக்கியத்துவம்
இந்த நிலையில், அனைத்து ஜனதா தள கட்சிகளும் ஒன்றிணைய முடிவு செய்தன. இந்த அணிக்கு காங்கிரஸ் ஆதரவை தெரிவித்தது. மேலும், நிதிஷ்குமார் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது.

லாலு அதிர்ச்சி
காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும், நிதிஷ் குமாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், லாலு பிரசாத் யாதவ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இஃதார் விருந்து புறக்கணிப்பு
இதனையடுத்து, சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ள இஃப்தார் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். மேலும், அதே நாளில் போட்டி இஃப்தார் விருந்து நடந்த லாலுபிரசாத் யாதவ் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications