ஜெயலலிதாவை பார்க்க வரும் கட்சியினருக்கு தொல்லை தராதீர்கள்: பெங்களூர் கமிஷனரிடம் அதிமுக மனு
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் வரும்போது, அதிமுக நிர்வாகிகளுக்கு பெங்களூர் போலீசார் எந்த வகையிலும் இடையூறு விளைவிக்க கூடாது என்று கர்நாடக அதிமுக நிர்வாகிகள் பெங்களூர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பை கேட்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 27ம்தேதி சனிக்கிழமை பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு வருகிறார். அப்போது கோர்ட்டுக்கு வெளியே ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து போலீசார் பல வகைகளிலும் தொண்டர்கள் கூட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக அதிமுக சார்பில் நிர்வாகி கிருஷ்ணராஜ் தலைமையிலான நிர்வாகிகள், போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் பெங்களூர் வருகையை முன்னிட்டு கர்நாடக மாநில கழக தோழர்களும் மற்றும் பொதுமக்களும் பல்லாயிர கணக்கில் அவரை பார்ப்பதற்கு வருவார்கள். அவர்களுக்கு போலீஸ் தரப்பில் எந்த தொல்லையும் தரக்கூடாது. அதே நேரத்தில் அம்மா அவர்களுக்கு அளிக்கும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காமல் போலீஸ் அதிகாரிகள் கூறும் இடத்தில் கழக தோழர்கள் நிற்போம்.
கழக தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் போலீஸ் தரப்பில் இருந்து எந்த இடைஞ்சலும் செய்ய வேண்டாம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற போலீஸ் கமிஷனர், கழகத்தினரும், பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அதே நேரத்தில் போலீஸ் தரப்பில் இருந்து எந்த தொல்லையும் இருக்காது என்று உறுதியளித்தார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
விந்தியா பேசும்போதே குறுக்கே நபர்.. மைக் ரிப்பேர்.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் செம டென்ஷன் -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications